தருமபுரி, பிப்.2- மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாண்டிச்சேரி மற்றும் சண்டிகார் உள் ளிட்ட யூனியன் பிரதேசங்களில் மின் வாரி யங்களை தனியார்மயப்படுத்துகின்ற நட வடிக்கையை ஒன்றிய அரசு முன்னெடுத் துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட டீலா யிட் என்ற கம்பெனி தனது ஆலோச னையை பாண்டிச்சேரி அரசிற்கு வழங்கி யுள்ளது. இதனால் பாண்டிச்சேரி மின் வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் செவ் வாயன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கி உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தை வாழ்த்தியும், ஆதரவு தரும் வகையிலும் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் மாவட்ட செயலாளர் சி.சக்திவேல் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செய லாளர் பி.ஜீவா, மாவட்ட செயலாளர் தீ. லெனின் மகேந்திரன், பொருளாளர் ஜெயக் குமார், ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் முரு கன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செய லாளர் அன்பழகன், ஐக்கிய சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், என்எல்ஒ மாவட்ட செயலாளர் பிரபாகரன், அம்பேத்கர் எம் ளாயீஸ் பெடரேசன் மாவட்ட செயலாளர் கோகுல்தாஸ், ஐஎன்டியுசி மாவட்ட செயலா ளர் சொர்னராஜ், பொறியாளர் அமைப்பின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, பொறியா ளர் கழக மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.