நாமக்கல், ஏப்.30- மோட்டார் தொழிலை சீரழிக்கும் சட்டத்தை கண்டித்து, நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு) பள்ளிபாளையம் வட்டார போக்குவ ரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மோட்டார் தொழிலை அழிக்க கொண்டு வந்துள்ள மோட்டார் வாக னம் சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் இச்சட் டத்தை அமல்படுத்த கூடாது. ஆன் லைன் மூலம் அபராதத்தொகை விதிப்பதை கைவிட வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி நாமக்கல் மாவட்ட மோட் டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் வட் டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் நவாப்ஜான் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் சு.சுரேஷ், சிஐடியு மாவட்ட தலை வர் எம்.அசோகன், ஆட்டோ சங்க தலைவர் தண்டபாணி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட அமைப் பாளர் எம்.ஆர்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.