districts

img

பட்டு வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம் ஜூலை 24- பட்டுப் பண்ணைகள் பட்டு நூல் பாகங்கள் உள்ளிட்ட அலகுகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டு வளர்ச்சித்துறையில் காலி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மத்திய திட்டங்க ளுக்கு இணையாக மாநிலத் திட்டங் களிலும் உயர்த்தி வழங்கிட வேண் டும். புதிய அரசு பட்டு நூற்பகங் களை கூடுதலாக அமைத்திட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதி யத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை வழங்கிட வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பட்டு வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாவட்ட தலைவர் பி.சொர்ணா தலைமையில் நடைபெற்ற கோரிக் கைகளை விளக்கி மாநில செய லாளர் ஆர். சரவணன் முன்னாள் பொதுச் செயலாளர் பி. கோவிந் தசாமி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சு ரேஷ் நிறைவுறையாற்றி முடித்து வைத்தார். இதில் மோட்டார் வாகன பழுது நீக்கல் துறை மாநில நிர்வாகி சி.முருகப்பெ ருமாள் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநிலப் பொருளா ளர் என். திருநாவுக்கரசு, மாவட்டப் பொருளாளர் எஸ்.சூடாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தருமபுரி  இதேபோன்று, தருமபுரி பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்கு நர் அலுவலகம் முன்பு புதனன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சி.வினயா  தலைமை வகித்தார். மாநிலப் பொரு ளாளர் சி.கல்யாணசுந்தரம் சிறப் புரையாற்றினார். மாவட்டச்செய லாளர் ஸ்ரீநாத் மாவட்டப் பொரு ளாளர் முரளி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிபேசினர். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், ஜாக்டோ - ஜியோ மாவட்டப் பொருளாளர் கே.புகழேந்தி, தமிழ் நாடு வேளாண்மை துறை அமைச் சுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயவேல், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராமன், முன் னாள் மாவட்டத் தலைவர் சி. காவேரி, முன்னாள் பொது சுகாதா ரத்துறை அலுவலர் சங்க மாவட்டத்  தலைவர் நாகராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்