districts

img

அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.26- ஆத்தூர் நகராட்சி, முல்லைவாடி பகுதி மக்களுக்கு குடி நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க் சிஸ்ட் கட்யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, முல்லைவாடி பகுதி யில் மேட்டுர் குடிநீர் இதுவரையிலும்  கிடைக்கவில்லை. மேலும் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாததை கண்டித்து ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஆர்.செங்கமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தாலுகா செயலாளர் எ.முருகேசன், தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.பிரபு, ஆர்.வெங்கடாஜலம், கே.பெரியண்ணன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மேட்டூர் குடிநீர் உடனடியாக லாரி மூலம் வழங் கப்பட்டது. தெருவிளக்கு, சாலை வசதி ஆகியவை உடனடி யாக சரி செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.