districts

img

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுக

கோவை, டிச.30- தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக  ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர்  திங்களன்று போக்குவரத்து பணி மனை முன்பு வாயில் கருப்பு துணி  கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தேர்தல் வாக்குறுதிகள் நிறை வேற்ற வேண்டும். 109 மாத நிலு வையுடன் டி.ஏ. உயர்வு வழங்க வேண்டும். 21 மாத காலப் பணப் பலன்கள் மற்றும் ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்கள், பழைய பென்சன் திட்டம், வாரிசு வேலை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பினர் திங்க ளன்று கோவை சுங்கம் கிளையில் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு, சி.பழனிச்சாமி  தலைமை வகித்தார்.  சுரேந்திரன் எஸ்இடிசி, கிருஷ்ண ராஜ் மற்றும் சேதுராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல  அமைப்பு சார்பில் முன்னூற்றுக் கும் மேற்பட்ட ஓய்வூதிர்கள் பங் கேற்றனர். சேலம் சேலம், அஸ்தம்பட்டி விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.வாசன் தலைமை வகித்தார்.  இதில் சிஐடியு சாலைப் போக்குவ ரத்து சங்க மாநில துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன், அரசு  விரைவு போக்குவரத்து சங்க  மாநில துணைப் பொதுச்செயலா ளர் முருகேசன், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நல சங்க நிர்வாகி மணிமுடி, அரசு  போக்குவரத்து கழக ஊழியர் சங்க  பொதுச்செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, கிளைச் செயலாளர் சந்தி ரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.