districts

img

கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.2- பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதுநிலை ஆய்வாளர் பதவியி லிருந்து கூட்டுறவு சார்பதிவாளர்கள் பதவி உயர்வு பணி ஒதுக்கீடு பட்டி யலில் முன்னுரிமை பின்பற்றாததை கண்டித்தும், வாரத்தின் ஐந்து நாட்க ளிலும் ஆய்வு கூட்டங்கள் நடத்து வதை கைவிட வேண்டும்.பால் கூட்டு றவு தணிக்கை துறையில் மூன்று ஆண்டுகள் பணி முடித்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மாவட்ட பணி ஒதுக்கீட்டில் வெளிப் படைத் தன்மையை பின்பற்ற வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தரும புரி கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் பொ.சி.குமார் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட இணைச்செயலாளர் லோ. விஜயகுமார், வட்டத் தலைவர் இனி யன், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பா ளர் கே.புகழேந்தி, அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் ஸ்ரீநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.