தாராபுரம், நவ. 1 - தாராபுரத்தில் சத்துணவு ஊழியர் களை ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி மாறுதல் செய்வதை கண்டித்து தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சத்துணவு ஊழியர்களை ஒரு ஒன்றி யத்தில் இருந்து வேறொரு ஒன்றியத் திக்கு பணிமாறுதல் செய்வதை கண் டித்து தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தாராபுரம் ஒன்றிய தலைவர் பார்வதி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தின்போது ஒரு ஒன்றியத்தில் பணியாற் றும் ஊழியரை அதே ஒன்றியத்திற்குள் பணிமாறுதல் செய்வதை விடுத்து வேறு ஒன்றியத்திற்கு பணிமாறுதல் செய்வதை கண்டித்து கோசங்கள் எழுப் பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி, மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் மு.மேகலிங்கம், வட்டக்கிளை தலைவர் கே.செந்தில்கு மார், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க கோட்ட செய லாளர் இல.தில்லையப்பன் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.