திருப்பூர், செப். 5 - புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததை காரண மாக கொண்டு, தமிழ்நாடு அரசின் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் சின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற் காததால் தமிழ்நாடு அரசின் கல்வித் துறைக்கு நிதியை ஒதுக் காத பாஜக அரசை கண்டித்தும், உடனடியாக தமிழக கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வலியுறுத்தி யும் திராவிடர் கழக இளைஞரணி, திராவிடர் மாணவர் கழகம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தை கள், தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை யாற்றினர். பெரியார் பிறந்த மண்ணில் ஆர்எஸ்எஸ்சின் கல் விக் கொள்கை எடுபடாது என்றும், ஆர் எஸ் எஸ் சின் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வும் கண்டன முழக்கம் எழுப்பினர்.