districts

img

மரங்கள் வெட்டி கடத்தல்: நெடுஞ்சாலைத்துறை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.16- நெடுஞ்சாலைத்துறைக்கு சொந் தமான மரங்களை கடத்திச்சென்றவர் கள் மீது நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத்துறையை கண் டித்து எலச்சிபாளையம் போராட்ட ஒருங்கினைப்புக்குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு அருகே எலச்சி பாளையம் கொன்னையாறு கிராமம்  சக்கரம் பாளையம் பகுதி உள்ளது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகில் சண்முகம் என்பவர்,  கடந்த 10 தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மான பனைமரம் வேப்பமரம் உள்ளிட் டவைகளை வேரோடு பிடுங்கி லாரி கள் மூலம் விற்பனை செய்துள்ளார்.  மேலும், அரசு புறம்போக்கு நிலத்தில்  மண்ணை அள்ளி விற்பனை செய்வ தும், மயான நிலத்தை ஆக்கிரமித் தும் உள்ளார். பல்வேறு குற்றங்கள்  செய்த அடிப்படையில் வருவாய்த் துறையினர் மூலம் புகார் அளிக்கப் பட்டு பின்னர் மயான இடத்தை அரசு  அதிகாரிகள் மீட்டனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மான இடத்தில் உள்ள மரங்களை வெட்டிய சண்முகத்தின் மீது நெடுஞ் சாலை துறை நடவடிக்கை எடுக்க வில்லை. மரங்களை கடத்தியவ ருக்கு துணை போகும் நெடுஞ்சா லைத்துறையை கண்டித்து எலச்சிபா ளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் கவுன்சிலர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், மாவட்டக்  குழு உறுப்பினர் பழனியம்மாள், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தேவ ராஜ், நாம் தமிழர் பரமத்தி தொகுதி  செயலாளர் சதீஷ், மற்றும் பொதுமக் கள் திரளானோர் பங்கேற்றனர். முடி வில், ஊர் தர்மகர்த்தா நல்லமுத்து நன்றி கூறினார்.