மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்த பட்ஜெட்: ஒன்றிய மோடி அரசு தாக்கல் செய்திருக் கும் பட்ஜெட் மாற்றுத்திறனாளிகளைப் புறக் கணித்திருக்கிறது எனக் கூறி திருப்பூரில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் கனரா வங்கிக் கிளை முன்பு வெள்ளியன்று மாலை நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சஞ்சீவ் தலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ், நிர்வாகி கள் லோகநாதன், கமலக்கண்ணன், பொம்மு துரை, ரோஸி உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். பெருந்திரளான மாற்றுத்திறனா ளிகள் கலந்து கொண்டனர்.