திருப்பூர், செப். 28 – தஞ்சையில் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயி களைத் தாக்கி குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த காவல் துறையைக் கண்டித்து ஊத்துக்குளி யில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டம், திருமண்டங்குடி திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் கடந்த 300 நாட்க ளாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவ சாயிகளின் நியாயமான கோரிக்கை களை நிறைவேற்ற மாநில அரசை வலி யுறுத்தி கடந்த 26ஆம் தேதியன்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய வர்களை காவல்துறை தாக்கி அராஜ கமாக இழுத்துச் சென்று குண்டுக்கட் டாக கைது செய்துள்ளனர். கரும்பு விவசாயிகளின் கோரிக்கை களை உடனே நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் சங்க தலைவர்களை தாக் கிய தஞ்சை மாவட்ட காவல்துறையை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஊத்துக்குளி தாலுக்கா குழு சார்பில் வியாழனன்று ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் தாலுக்கா தலை வர் மணி (எ) சுப்பிரமணியம் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட செயலா ளர் ஆர்.குமார், தாலுக்கா செயலாளர் கொளந்தசாமி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செய லாளர் கு.சரஸ்வதி, அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்க தாலுகாத் தலை வர் மணியன், சிஐடியு பொருளா ளர் காமராஜ் உள்ளிட்ட திரளான விவசா யிகள் கலந்து கொண்டனர். த.வி.ச. தாலுக்கா பொருளாளர் சத்தியமூர்த்தி நன்றி தெரிவித்தார்.