districts

img

அமெரிக்காவின் மனித தன்மையற்ற செயல் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப்.10- இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிட்டு நாடு கடத்திய  அமெரிக்கா அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாக குடியேறிவர்கள் எனக்கூறி, அமெரிக் காவிலிருந்த இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு பூட்டி,  அந்நாட்டு அரசு நாடு கடத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த  மனித தன்மையற்ற செயலைக் கண்டித்து, இந்த அராஜக செயலை கண்டிக்காத மோடி அரசைக் கண்டித்தும் மார்க் சிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்தசாமி தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபா லன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.நாகராசன், சோ. அருச்சுனன், ஆர்.மல்லிகா, இடைக்கமிட்டி செயலாளர்கள் ஆர்.ஜோதிபாசு, சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.ராமச்சந்திரன், கே.பூபதி, எம்.அருள்குமார், ஏ.ஜெயா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.