திருப்பூர், ஜன.3 - திருப்பூரில் கனரா வங்கி மூலம் ஓய்வூதியம் பெறும் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்க ளுக்கு உரிய காலத்தில் வங் கிக் கணக்கில் ஓய்வூதி யத்தை வரவு வைக்காமல் இழுத்தடிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு என். ஆரோக்கியநாதன், பழனிவேல்சாமி ஆகி யோர் தலைமை ஏற்றனர். பிஎஸ்என்எல் ஊழி யர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ். சுப்பிரமணியன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அமைப்புச் செயலாளர் எம்.அண்ணாதுரை, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாநில நிர்வாகி ஏ.முகமது ஜாஃபர் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். திருப்பூர், பல்லடம், அவனாசி பகுதிகளைச் சேர்ந்த ஓய் வூதியர்கள் திரளாக பங்கேற்றனர். பல்லடம் கிளைச் செயலாளர் எம்.முருகசாமி நன்றி கூறி னார்.