18 ஆவது மக்களவைத் தேர்தலை ஒட்டி, தமிழகம் முழுவ தும் நேற்று (வெள்ளியன்று) வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 39 தொகுதிகளில், 68, 321 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் முழு வதும், சுமார் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்க ளது வாக்குகளை செலுத்தினர். அந்த வகையில், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட தொகுதிகளுக்குட் பட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் ஆர்வமுடன் வாக்க ளித்தனர்.
கோவை
கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கண பதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைப்பட்டிருந்த வாக் குச்சாவடி மையத்தில், குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பா ளர் கே.ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட, மைவாடி ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் ஜனநாயக கடமையாற்றினார்.
சேலம்
சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி, காந்தி ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி யில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தருமபுரி
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி, தனது ஜனநாயக கடமையாற்றினார்.
ஈரோடு
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.இ. பிரகாஷ், மோளகவுண்டம்பாளையத்தில் அமைக்கப்பட்டி ருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
நாமக்கல்
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாள ராக போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த மாதேஸ்வரன், பொட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.