districts

img

இலவச வேட்டி, சேலை உற்பத்தியை ஜூன் மாதம் தொடங்க கோரிக்கை

ஈரோடு, மே 9- விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி பணியை, ஜூன்  மாதம் முதல் வாரத்தில் துவங்க அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்ட மைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்ட கைத்தறித்துறை உதவி இயக்குனரிடம், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு ஒன்றை அளித்தனர். இதன்பின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதானமாக நெசவுத்தொழில் உள்ளது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை, பள்ளி மாண வர்களுக்கு இலவச சீருடை போன்ற திட்டங்களை, 228  விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 67 ஆயிரம் விசைத் தறிகள் மூலமாக அமல்படுத்தி, பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உக்கரைன் போர் மற்றும் உலக பொருளதார பிரச்சனை காரணமாக பல லட்சம் நெசவுத்தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இலவச வேட்டி, சேலை  திட்டத்தை துவங்கிட அரசாணை வெளியிட வேண்டும், என்றார்.