districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த கூலியை வழங்க கோரிக்கை

அவிநாசி, டிச.7 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்க ளுக்கு, அரசு நிர்ணயித்துள்ள முழு கூலியை வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தினர் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  வியாழக்கிழமை மனு அளித்துள்ளனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய குழு சார்பில் வட்டார வளர்ச்சி மேலாளர் தவமணியி டம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, 100 நாள் வேலைத்  திட்டத்தை அனைவருக்கும் வருடம் முழுவதும் வழங்க  வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி புரியும் தொழி லாளர்கள் பலருக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.  அதை உடனே வழங்க வேண்டும், அரசு நிர்ணயித்துள்ள முழு கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் குடிநீர், குழந்தைகள் காப்பகம், முத லுதவி, நிழல் கொட்டகை அமைக்க வேண்டும். தனியாக வாழும் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு ஜாப்காட் கொடுப்ப தில் பாரபட்சம் காட்டுவதை நிறுத்த வேண்டும். நகர்ப்புறங்க ளிலும் 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய  வேண்டும். உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப் பட்டுள்ளது. இதில் மாதர் சங்கத்தின் மாவட்டதுணை தலைவர் பானுமதி, ஒன்றியச் செயலாளர் செல்வி,  ஒன்றிய தலைவர் சித்ரா, துணைச் செயலாளர் சிவகாமி  ஒன்றியக் குழு உறுப்பினர்கள் காசியம்மாள், கருணாம் பாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாக்கு என்னும் மையங்களில் ஆய்வு

திருப்பூர், டிச.7- 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்த லுக்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட் டத்தில் உள்ள திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான ஆறு  சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவாகும் வாக்கு இயந்திரங் களை வைப்பதற்கான வைப்பறை மற்றும் வாக்கு எண் ணிக்கை மையம் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி  அரசு மகளிர் கலை கல்லூரியில் உருவாக்கப்பட உள்ளது.  அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பாதுகாப்பு  ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும்  மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் தலைமை யில் அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேரில்  ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினர்.

பிரிட்டன் பிரைமார்க் நிறுவனக் குழு திருப்பூர் வருகை

திருப்பூர், டிச.7- பிரிட்டனை சேர்ந்த பிரைமார்க் நிறுவனக் குழுவினர் திருப் பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பிரிட்டனின் முன்னணி ஆயத்த ஆடை வர்த்தக நிறுவன மான பிரைமார்க் நிறுவனத்தின் வளம் குன்றா வளர்ச்சிக் கோட்பாட்டினைக் கையாளும் குழுவினர் திருப்பூர் ஏற்றுமதி யாளர்கள் சங்க நிர்வாகிகளை புதன்கிழமை சந்தித்து ஆலோ சனையில் ஈடுபட்டனர். இதில், பிரைமார்க் நிறுவனத்தின் பீஓங், ஜோகன்னா வில் சன், அபிரூதன், ரூத் மார்டின் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக்  குழுவினரை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலை வர் கே.எம்.சுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினார். இதைத்  தொடர்ந்து, சங்கத்தின் துணைத் தலைவரும், திருப்பூர்  தொழில் வளம் பங்களிப்போர் அமைப்பினர் தலைவருமான  வி.இளங்கோவன், பொதுச் செயலாளர் திருக்குமரன், இணைச்செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் உரை யாற்றினர். திருப்பூர் கிளஸ்டரில் வளம் குன்றா வளர்ச்சி  உற்பத்தி கோட்பாட்டின் கீழ் எந்த மாதிரியான நடவடிக்கைகள்  எடுக்கப்படுகிறது என்பதையும், பின்னலாடை ஏற்றுமதி நிறுவ னங்களில் பெண்களுக்கான பங்களிப்பு, வடமாநிலத் தொழி லாளர்களுக்கான பாதுகாப்பு, நிறுவனங்கள் சார்பில் சமூ கத்துக்கான பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன. மேலும், குளங்கள்  தூர்வாருதல், மரம் நடுதல், மரபுசாரா மின் உற்பத்தி, பூஜ்ய நிலை சுத்திகரிப்பு, சாலை வசதி உள்ளிட்டவற்றில் ஏற்றுமதி யாளர்களின் பங்கு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த சந்திப்பானது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியின்  வளர்ச்சிக்கு உதவும் என்று சங்க நிா்வாகிகள் தெரிவித் தனர்.

வரட்டுப்பள்ளயம் அணை நிரம்பியது வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு, டிச.7- பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள தால், வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளி யேறும் வாய்ப்புள்ளதால், கரையோரம் வசிக்கும் 3 கிராம  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வரட்டுப் பள்ளம் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அணை வேகமாக நிரம்பி  வருகின்றன. வரட்டுப்பள்ளம் அணையின் உயரம் 33.46 அடி  என்ற நிலையில், தற்போது, 32.5 அடி அளவுக்கு நீா் நிரம்பி யுள்ளது. ஏரிக்கு நீா்வரத்து வியாழனன்று காலை 8 மணி  நிலவரப்படி விநாடிக்கு 230 கன அடியாக உள்ளது. அடுத்த  24 மணி நேரத்தில் அணையின் முழு நீர் மட்டமான 33.46  அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அடுத்த  24 மணி நேரத்தில் அணையில் இருந்து உபரி நீரானது வெளி யேறும் வாய்ப்புள்ளது. எனவே, வரட்டுப்பள்ளம் அணை யின் உபரிநீர் செல்லும் ஓடைகளில் தாழ்வான பகுதிக ளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்ச ரிக்கை அறிவிப்பினை தெரிவிக்குமாறு வருவாய்த்துறை யினர் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. இதனைத்தொடர்ந்து வரட்டுப்பள்ளம் அணை எந்நே ரமும் அதன் முழுகொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற  வாய்ப்புள்ளதால், உபரிநீர் வெளியேறும் அணையின் கரை யோரங்களில் உள்ள சங்கராபாளையம், கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம் ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அணையின் நீர்மட்டத்தை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கொள்ளை வழக்கு

குற்றவாளியின் தந்தை தற்கொலை

கோவை, டிச.7  கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய்யின் தந்தை தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் கடந்த மாதம் 28ம்  தேதி காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை நடை பெற்றது. சுமார் 4.8 கிலோ தங்கம், பிளாட்டினம், வைர நகை கள் கொள்ளையடிக்கப் ப்பட்டது.இதைத்தொ டர்ந்து, அமைக்கப்பட்ட தனிப்படை கள், குற்றவாளி  விஜய்யை தீவிர மாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, விஜய்யின் மனைவி, மாமியார் யோகராணி உள்ளிட் டோரை போலீசார் கைது செய்து, அவர் களிடமிருந்த நகைகளை மீட்டனர்.  இன்னும் 3 நாட்களில் கொள்ளையனை பிடித்து விடுவோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலை யில், வழக்கு தொடர்பாக குற்றவா ளியின் தந்தை முனிரத்தினத்தை கோவை போலீசார் விசாரித்து விட்டு  சென்றனர். இதைத்தொடர்ந்து, முனி ரத்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டதாக தெரி கிறது. தகவலறிந்து சென்ற கம்பைநல் லூரி போலீசார், உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத் தனர்.

பழமையான நுழைவுவாயில் அகற்றம்

கோபிசெட்டிபாளையம், டிச.7- கோபிசெட்டிபாளையம் பகுதியில் பழமையான நுழைவு வாயில், சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்றப்பட்டது.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதி சிறந்த  சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுக ளுக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெரும்பாலான திரைப்படங்கள் எடுக்கப் பட்டன. இதனால் இப்பகுதியை சின்ன கோடம்பாக்கம் என்று  பெயர் பெற்று திகழ்ந்தது. கடந்த 1950 ஆம் ஆண்டுகளில் இருந்தே கோபிசெட்டிபாளையம் பல வரலாற்று சிறப்பு களையும் பெற்று வருகிறது. இந்த பகுதிகளில் வரலாற்று சின்னங்களும் கம்பீரமாக இருந்து வருகிறது. கோபிசெட்டி பாளையத்தில் கடந்த 1-12-1958 ஆம் ஆண்டு கோபி கிழக்கு  பகுதியிலும் (கரட்டூர்), மேற்கு பகுதியிலும் (குடிநீர் மேல் நிலை தொட்டி அருகிலும்) நகராட்சி சார்பாக அப்போதே 2  நுழைவுவாயில்கள் (ஆர்ச்) கட்டப்பட்டு திறப்பு விழா நடை பெற்றது. அதை அப்போதைய முதல்வர் காமராஜர் திறந்து  வைத்தார். ஈரோடு, சத்தியமங்கலம் சாலையில், கோபிசெட்டி பாளையம் என வளைவு அமைக்கப்பட்டு தூண்களுடன் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக பொதுமக் களை வரவேற்கும் வகையில் நிலைத்து நின்று வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு கரட்டூர் நுழைவுவாயில் மீது லாரி மோதியதில் அது இடிந்து விழுந்தது. அதைத்தொடர்ந்து புதியதாக கிழக்கு பகுதியில் நுழைவுவாயில் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்நிலையில், சித்தோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி, சாலை கள் அகலப்படுத்தப்படுத்தப்படுவதால், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, ஈரோடு - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், கோபி செட்டிபாளையம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 60  ஆண்டுகள் பழமையான நுழைவுவாயில் (ஆர்ச்) சாலை  விரிவாக்க பணிகளுக்காக புதனன்று இரவு நெடுஞ்சாலைத் துறையினர் எந்திரங்கள் மூலம் இடித்தனர்.

54 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

கோவை, டிச.7- சூலூரில் 54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது, வட  மாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக வரும் லாரி களில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.  கோவை மாவட்டம் சூலூர் அடுத்த குளத்தூர் பிரிவு பகுதி யில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரை விசாரணை செய்தனர். அவரது உடைமைகளை சோதனையிட்டதில் 5 கிலோ உலர் கஞ் சாவை விற்பனைக்காக பையில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த கருப்பசாமி என்பதும், நீலம்பூர் பகுதியிலுள்ள தனி யார் உணவு விடுதியில் காசாளராகவும் மற்றும் எல்&டி புறவழிச்சாலையில் வடமாநிலங்களுக்கு செல்லும் பொருட் களை லாரி மூலம் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வரு வதும் தெரியவந்தது. உணவு விடுதியின் மேலாளரான நாக ராஜ் என்பவருடன் சேர்ந்து கருப்பசாமி, வட மாநிலங்க ளில் இருந்து வரும் லாரிகளில் கஞ்சா கடத்தி வந்து கோவை  புறநகர பகுதிகளில்  உள்ள சிறு  வியாபாரிகள் மூலம் விற்பனை செய்வதும், மதுரையில் விற்பனைக்காக 50 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் வெளிப்பட்டது.. இதையடுத்து கருப்புசாமியை மதுரைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கோவைக்கு எடுத்து வந்தனர். இதையடுத்து கருப்பு சாமியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரது கூட்டாளியான நாகராஜ் என்ப வரையும் போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கோவை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பார்வை யிட்டடார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  சூலூரில் மட்டும் இந்த ஆண்டு 3000 கிலோ குட்கா பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கல்லூரிகளில் ராகிங் மற் றும் போதைப் பொருள் பயன்பாடுகளை தடுக்க போலீஸ் மற்றும் கல்லூரி மாணவர்கள் உடனான சந்திப்புகள் தொடர்  நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்படும், என்றார்.

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

ஈரோடு, டிச.7- கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தின் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை  கிளையின் சார்பில், ஆலை நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, 1966 கரும்பு கட்டுப்பாடு சட்டத்தின் படி, லாபத் தில் விவசாயிகளுக்கு பங்கு அளிக்க வேண் டும். (2004-05 மற்றும் 2008-09) உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி விவசாயிகளுக்கு லாபத்தில் பங்கை உடனடியாக வழங்க வேண்டும். கரும்பு உற்பத்தி கூடுதல் செலவு, வன விலங்குகள் பாதிப்பு உள்ளிட்ட காரணங்க ளால் கட்டுப்படியான விலை இல்லை. எனவே பஞ்சாப், ஹரியானாவைப் போல தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயி ரம் வழங்க வேண்டும். விவசாயிகள் விரும் பும் கரும்பு நடவு ரகத்தை ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும். வெட்டுக்கூலி பாதியை ஆலை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண் டும். கரும்பு வெட்டில் தற்போது ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆலை நிர்வாகத்தின் சார்பில் ராதாகிருஷ்ணன் (எக்ஸ்க்யூட்டிவ் பிரசிடெண்ட்), மேலாளர் (கரும்பு) கோகுல் மற்றும் மேலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர்,  மனுவை பெற்றுக்கொண்டு உரிய கவனம் செலுத்துவதாக உறுதியளித்தனர். இந்நிகழ் வின்போது, கரும்பு விவசாயிகள் சங்க தலை வர் ஆர்.சுப்பையன், செயலாளர் எஸ்.முத்து சாமி, கே.ஆர்.சுப்பிரமணி, கே.எம்.சதீஷ் ராஜ், கே.கே.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் – சென்னை விமான சேவை மீண்டும் துவக்கம்

சேலம், டிச.7- சேலம் விமான நிலையத்திலிருந்து சென் னைக்கு புதனன்று விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள  விமான நிலையத்தில் இருந்து சென்னை விமானப் போக்குவரத்து இரண்டு நாள்கள் நிறுத்தப்பட்டிருந்தது. சென்னையில் மிக் ஜம் புயலால் சென்னை விமான நிலையம் தண்ணீரால் சூழப்பட்டது. இதனால், சென் னையில் இருந்து விமானப் போக்குவரத்து இரண்டு நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னையில் சகஜ நிலை திரும்பியதைத் தொடர்ந்து விமா னப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால், நண்பகல் 12.30 மணிக்கு சேலம்  வரவேண்டிய விமானம் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக மதியம் 2 மணிக்கு வந்தது. பெங்க ளூரு, சேலம் கொச்சின் விமானமும், பெங் களூரு, சேலம் ஐதராபாத் விமானமும் வழக் கம் போல வந்து சென்றன.

குறைதீர் கூட்டம்

நாமக்கல், டிச.7- நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத் தின் மூலம் பெயர் சேர்த்தல்,  பெயர் நீக்கல், பெயர் திருத் தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு போன்ற சேவைகளை மேற்கொள்ள பொது விநி யோகத் திட்ட குறைதீர் கூட் டம் சனியன்று (நாளை) நடை பெற உள்ளது. மாவட்டத்தி லுள்ள 8 வட்டங்களிலும், காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளதென மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.