districts

img

பதிவு சான்று நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்

திருப்பூர், ஜூலை 23 - தமிழகத்தில் ஒரு இடத்தில் பதிவு சான்று பெற்றால் அதை மாநிலம் முழுவ தும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்க  வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி  பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப் பின் மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறி யாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மண்டல மாநாடு (மண்டலம்-7) திருப்பூர்  வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில்  திங்களன்று நடைபெற்றது. மாநாட் டிற்கு மண்டலம் 7-ன் தலைவர் சௌ. ஸ்டாலின்பாரதி தலைமை தாங்கி பேசி னார். திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தலைவர் அருண் கே. ரமேஷ் வரவேற்றார். துணைத் தலைவ ரும்,  கண்காட்சித் தலைவருமான வி. ஜனார்த்தனன் கண்காட்சி உரை ஆற்றி னார். கண்காட்சி செயலாளர் கௌதம் பொறியாளர்கள் உறுதிமொழி வாசித் தார். மண்டலம் 7-ன் செயலாளர் பாரத ரத்தினம் செயல் அறிக்கை வாசித் தார். இதில் மாநிலத் தலைவர் விஜய பானு, செயலாளர் பாஸ்கரன், பொரு ளாளர் அசோகன், உடனடி முன்னாள் தலைவர் ராஜேஷ் தமிழரசன், துணைத் தலைவர் பிரபு, இணைச்செயலாளர் கலியமூர்த்தி, முன்னாள் தலைவர்கள் தில்லைராஜன், சையது சாஹிர், ராக வன் உள்ளிட்ட மாநில, மண்டல முன் னாள் நிர்வாகிகள், கூட்டமைப்பை சார்ந்த மண்டல தலைவர்கள், மண்ட லம் 7-ன் சங்கங்களை சார்ந்த தலைவர் கள் பேசினார்கள்.   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் பின்வருமாறு, கட்டிடப் பணி  நிறைவு சான்றிதழ் பெறுவதற்கு 3 குடியி ருப்புகளில் இருந்து 8 குடியிருப்பு களாக மாற்றியதற்கும், 300 சதுர மீட்டர்  பரப்பளவிலான வணிக கட்டிடங்க ளுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில்  இருந்து விலக்கு அளித்ததற்கும், கட்டி டப் பணி நிறைவு சான்று பெறுவதற்கு  கட்டிடத்தின் உயரத்தை 12 மீட்டரில்  இருந்து 14 மீட்டராக உயர்த்தியதற்கும்,  உடனடி கட்டிட அனுமதி பெறுவதற்கு  ஏற்பாடு செய்ததற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, பதிவு பெற்ற பொறி யாளர் சான்றிதழ் பெறுவதற்கு பொறி யாளர்கள் மாநகராட்சி, உள் ளூர் திட்டக் குழுமம், பஞ்சாயத்து யூனி யன் என்று ஒவ்வொரு இடத்திலும் பதிவு  செய்ய வேண்டியது இருக்கிறது.  எனவே தமிழகத்தில் ஒரு இடத்தில்  பதிவு சான்று பெற்றால் அதை மாநிலம்  முழுவதும் பயன்படுத்தலாம் என்று  அறிவிக்க வேண்டும் என்பது உள்பட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. இந்த மாநாட்டில் மண்டலச் செயலாளர்கள்,  மண்டலம் 7-ன் சங்கங் களை சார்ந்த நிர்வாகிகள், உறுப் பினர்கள், திருப்பூர் சிவில் இன்ஜினி யர்ஸ் அசோசியேசன் முன்னாள் தலை வர்கள் உள்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் திருப்பூர் சிவில் இன்ஜினி யர்ஸ் அசோசியேசன் பொருளாளர் ஜார்ஜ் லியோ ஆனந்த் நன்றி கூறி னார்.