districts

img

தீபாவளிக்கு முன்பே வாரச்சந்தை அமைக்க ஈரோடு ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை

ஈரோடு, ஜூலை 30- தீபாவளிக்கு முன்பே ஈரோட்டில் வாரச் சந்தை அமைக்க வேண்டும் என ஜவுளி வியா பாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னிந்திய அளவில் பிரபலமான ஈரோடு ஜவுளி வாரச்சந்தை திங்களன்று மாலை முதல் செவ்வாயன்று மாலை வரை நடந்து வருகிறது. இரவு முழுவதும் விடிய விடிய நடைபெறும் இந்த சந்தைக்கு மாநிலத் தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளம், தெலுங்கானா, மகாராஷ் டிரா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிக ளும் அதிகளவில் வந்து மொத்தமாக துணி களை கொள்முதல் செய்வது வழக்கம். கனி  மார்க்கெட் வளாகத்தில் ஜவுளி வாரச்சந்தை  நடந்து வந்த நிலையில், புதிய வணிக வளா கம் கட்டுவதற்காக அகற்றப்பட்டது. தற் போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத் தில் வாரச்சந்தை நடந்து வருகிறது. இந்நிலை யில் ஜவுளி வியாபாரிகளின் நலனை கருத் தில் கொண்டு கனி மார்க்கெட் வணிக வளா கத்தில் உள்ள காலி இடத்தில் மீண்டும் வாரச் சந்தை அமைக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, தீபாவளி பண்டிகை தொடங்குவ தற்கு முன் ஜவுளி வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சி ஆணை யர் மனிஷிடம், ஜவுளி வியாபாரிகள் வலியு றுத்தியுள்ளனர். இதுகுறித்து ஜவுளி வாரச்சந்தை வியா பாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறுகை யில், ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை 60 ஆண்டுகளாக நமது அடையாளமாக இருந்து வருகிறது. இதன் மூலம் 720 வியாபா ரிகள் பயன்பெற்று வந்தனர். 2018 ஆம்  ஆண்டு கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டுமானப் பணி தொடங்கிய போது வாரச் சந்தை வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள் விக்குறியாகியுள்ளது. கனி மார்க்கெட் வணிக வளாக காலி இடத்தில் மீண்டும் வாரச்சந்தை அமைத்து தரப்படும் என அதி காரிகள் உறுதியளித்தனர். ஆனால், இது வரை வாரச்சந்தை அமைக்கப்படவில்லை. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோக புரத்தில் தனியார் இடத்தில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையால் வியாபாரிகள் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தனியாருக்கு அதிக வாடகை செலுத்த வேண் டியுள்ளது. போதிய அளவில் வியாபாரமும் நடப்பதில்லை. எனவே, மாநகரத்தின் மையப் பகுதியான கனி மார்க்கெட்டில் மீண்டும் வாரச்சந்தை அமைக்கப்பட்டால், அதை நம்பியுள்ள 720 வியாபாரிகளும் பயன்பெறுவர். இதன் மூலம் மாநகராட்சிக்கும் உரிய வருவாய் கிடைக் கும். தீபாவளிக்கு முன்னதாக வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.