districts

img

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்திடுக சாயப்பட்டறை உரிமையாளர்கள் கோரிக்கை

நாமக்கல், நவ.28- குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும், என  சிறு சாயப்பட்டறை உரிமை யாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சிறு சாயப் பட்டறை உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம், தலைவர் பிரபா கரன் தலைமையில் செவ்வா யன்று சங்க அலுவலகத்தில் நடைபெற் றது. செயலாளர் வேலுமணி, பொருளாளர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். இக்கூட்டத்தில் பருத்தி துணிகளை தயாரிப்பதற்கான நூல்களுக்கு வண்ணம் ஏற்றும் பணியினை சிறு சாயப்பட்டறைகள் செய்து வருகின்றன. விசைத்தறித் தொழிலை மட்டுமே முழுமையாக நம்பி  இந்த சிறு சாயப்பட்டறைகள் இயங்கி வரு கின்றன. தொடர்ச்சியாக விசைத்தறித்  தொழில் முழுமையாக பாதுகாக்கப்பட  வேண்டுமெனில், சிறு சாயப்பட்டறைக ளுக்கு பருத்தி இலைகளுக்கு சாயம் ஏற்று வது அவசியமாகிறது. இதை உணராமல் சிறு சாயப்பட்டறைகளை உடைத்து அழிப்ப தால், சாயம் ஏற்றும் பணிகள் பாதிப்பு ஏற் பட்டுள்ளது. சாயம் ஏற்றுவதற்கான மூலதன செலவுகள் பல மடங்கும் அதிகரித்துள்ளது. இதனால் விசைத்தறித் தொழில் சுமார் 80 சதவிகிதம் பாதிப்பை சந்தித்துள்ளதால், சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இழந்த ஜவுளித்தொழிலை மீட் டெடுக்கவும், காவிரி நீரை பாதுகாக்கவும், சாயக்கழிவுநீரை சுத்தப்படுத்த பொது சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இந்த  கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஒன் றிய அரசு பொது சுத்திகரிப்பு நிலையத் திற்கான அனுமதியும், அதற்கான நிதியும் உடனடியாக வழங்க வேண்டும், என இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.