districts

img

அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக. 12- குறைந்த பட்ச ஓய்வூ தியம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஈரோடு, கோவையில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதிய  சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபி  பேருந்து நிலையம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சத்துணவு ஊழியர்  சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் சோம சுந்தரம் தலைமை ஏற்றார். மாநிலச் செயலாளர் சம்பத் குமார் தொடக்க உரை யாற்றினார்.ஆர்ப்பாட் டத்தை வாழ்த்தி சகோதர சங்கங்களின்  தலைவர்கள் உரையாற்றினர். முடிவில்,  அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டத்  தலைவர் ராதாமணி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டது.  இதேபோன்று, கோவை, டாடாபாத் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு வட்டக்கிளை தலைவர் இரா.முரு கேசன் தலைமை ஏற்றார். இதில், வட்டக் கிளை செயலாளர் ஆர்.இராஜகோபால், மாவட்டப் பொருளாளர் பி.நடராஜன் உள் ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து உரை யாற்றினர். முடிவில், எஸ்.வேணுகோபால்  நன்றி கூறினார்.  இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண் டனர்.