districts

img

நடமாடும் மருத்துவ ஊர்திகளை முறையாக செயல்படுத்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை

திருப்பூர், ஜன.31- கால்நடைகளுக்கு முருத்துவம் பார்க் ஏது வாக நடமாடும் மருத்துவ ஊர்திகளை  முறையாக செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பேணி காக்க வேண்டும்  என விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் புதனன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட் டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். ஆர்.மதுசூதனன் பேசுகையில், கால்நடைக ளுக்கான தீவனம் மளிகை கடைகளில் விற் கப்படுகிறது. விவசாயிகள் இந்த தீவனங் களை வாங்கும் பொழுது ரசீது வழங்குவ தில்லை. அதனால் எந்த அத்தாட்சியும் இல் லாமல் போவதால், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அரசிடம் இருந்து நிவாரணம் பெறுவதற்கு சட்ட சிக்கல்கள் உருவாகிறது. எனவே கால்நடை தீவனங்கள் விற்கும் அனைத்து கடைகளிலும் முறையாக ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கால்நடை தீவனங்களால் 100க் கும் மேற்பட்ட மாடுகளுக்கு உடல் உபாதை கள் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம்  புகார் அளித்த பின்னரே தீவனங்கள் மீண்டும்  பெறப்பட்டது. மலை அடிவாரப் பகுதிகள் உட் பட பல பகுதிகளிலிருந்து கால்நடைகளை கால்நடை மருத்துவமனைகளுக்கு அழைத்து வர முடியாத சூழல் உள்ளது. நடமா டும் மருத்துவ ஊர்திகளை முறையாக செயல் படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பேணி காக்க வேண்டும். மடத்துக்குளத்தில் விவசாயிகள் நிலம் அளப்பதற்கு பதிவு செய்து பல மாதங்கள் ஆகியும், நில அளவை  துறையால் நிலம் அளக்கப்படாமல் உள்ளது.  உடுமலை அருகே இந்து அறநிலையத்து றைக்கு சொந்தமான இடம் தரிசாக உள்ளது  குறித்து, பலமுறை மனு அளித்துள்ளோம். மடத்துக்குளம் பகுதியில் குவாரியில் இருந்து  வெளியேறும் பாறை புழுதிகளால் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. பூசனிக்காய் வேளாண்மை செய்துள்ள விவசாயின் இரண்டு ஏக்கர் விலை நிலம்  முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்  அந்த விவசாயிக்கு பெரும் இழப்பு ஏற்பட் டுள்ளது இதுகுறித்து தகவல் தெரிவித்தும் வேளாண்மை துறை அதிகாரிகள் யாரும் ஆய்வு மேற்கொள்ளாமல் உள்ளனர். பாதிக் கப்பட்ட விவசாயி நிவாரணம் வழங்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கரும்பு விவசாயிகள் சங்கம் பாலதண்ட பாணி பேசுகையில், அமராவதி சர்க்கரை ஆலைக்கு இதுவரை 1460 விவசாயிகள் கரும்பு தர பதிவு செய்துள்ளனர். டிசம்பர் மாதம் துவங்க வேண்டிய பராமரிப்பு பணி கள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் உள் ளது. மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், அரசு  அதிகாரிகள் உள்ளிட்டோர் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மார்ச் மாதம் அரவை தொடங்கும் முன் பராமரிப்பு பணி களை விரைவில் மேற்கொள்ள வேண்டும். உடுமலை மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதி களில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க கோரி பலமுறை மனு அளித் துள்ளோம். அதன் மீது அரசு என்ன நடவ டிக்கை எடுத்துள்ளது என்று தெரியவில்லை. விவசாயிகள் வண்டல் மண் எடுக்க பல பகு திகளில் அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும்  பல பகுதிகளில் வாய்க்கால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. சர்வே செய்து ஆக்கிரமிப்பு களை அகற்றி வரும் பிப்ரவரி 12ஆம் தேதிக் குள் நடவடிக்கை எடுத்தால் விவசாயிகள் பய னடைவார்கள் என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர்  வடக்கு ஒன்றியச் செயலாளர் அப்புசாமி கூறு கையில், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர் தலுக்கு முன்பு துவங்கப்பட்ட அவிநாசி அத் திக்கடவு திட்டம் 5 ஆண்டுகள் ஆகியும் இன் னும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் திருப்பூர், ஊத் துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி நிலவு கிறது. அரசு உரிய கவனம் செலுத்தி உடனடி யாக இதற்கு தீர்வு காண வேண்டும். பல பகு திகளில் கால்நடை மருத்துவமனைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் முகிலன் பேசுகையில், அவிநாசிலிங்கம்பாளையம், கொளஞ்சிபாளையம், ஊத்துக்குளி ஆகிய  பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் அருகா மையிலேயே கல்குவாரிகள் செயல்படுகி றது. கனிமவளத்துறை அதிகாரிகள் அரசு  விதிகளை மதிக்காமல் பல இடங்களில் அனு மதி வழங்கியுள்ளனர். இதனால் சுற்றுச்சூ ழல் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் மீது அரசு உரிய கவனம் செலுத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தாராபுரம் பகுதி விவசாயி ஒருவர் கூறு கையில்,  பிஏபி வாய்க்காளுக்கு 5 டிஎம்சி தண் ணீர் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பரப்பி குளம் அழியார் திட்டத்திலிருந்து பிஏபி வாய்க்கால் இல்லாத  பகுதிகளுக்கு தண்ணீர் விட முடியாத சூழல் உள்ளது. பல பகுதிகளில் விவசாயிகள் தண் ணீர் கேட்டு போராடி வருகின்றனர். முறை யாக தண்ணீர் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். பல்லடம் பகுதியில் விவ சாய நிலங்களுக்கு மின் இணைப்பு கேட்டு  50 ஆயிரம் ரூபாய் செலுத்தியும் நான்கு மாதங் களுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்ப டாமல் உள்ளது. அதிகாரிகள் மின் இணைப்பு  வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.  மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய் பீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத் தில், சார் ஆட்சியர் சௌம்யா ஆனந்த், தாராபு ரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அர சன், இணை இயக்குநர் (வேளாண்மை)மா. மாரியப்பன், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) சொ.சீனிவாசன், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளார் (வேளாண்மை)  கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயி கள் கலந்து கொண்டனர்.