கோபி, ஆக. 23- கவுந்தபாடி அருகே சுகாதார சீடு ஏற்படுத்தும் கோழிப் பண்ணயை அகற்ற வேண்டும் என முதல்வரின் பிரிவுக்கு அப்பகுதி பொதுமக்கள் மனு அனுப்பினர். ஈரோடு மாவட்டம், கவுந்தபாடி அருகே உள்ள வேலம் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் ஒரு லட்சம் கோழிகளுக்கு மேலாக முட்டை உற்பத்திக்கு வளர்க்கப்பட்டு வருகிறது. இக்கோழிப் பண்ணையில் கடந்த சில மாதங்களாக கோழிக்கழிவுகள் அகற் றப்படமால் கழிவுகள் கோழிப்பணையில் குவிந்து வருவதால் துர்நாற்றம் வீசியும் ஈக்கள் உற்பத்தியாகி குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன்காரணமாக, வேலம்பாளையம், ஆஸ்பத்திரி மேடு, மணியம்பாளையம், உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அடிக் கடி மூச்சு திணறல், ஆஸ்துமா, தோள் நோய் உள்ளிட்ட பல் வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து, இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு அளித்துள்ளனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைய டுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதி பொது மக்கள் கோழிப்பண்ணை முன் திரண்டு எதிர்ப்பு தெரி வித்து வந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் ஊராட்சி நிர்வகம் சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வர்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் எவ்வித முன்னேற் றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், கவுந்தபாடியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதல்வரின் (சிஎம்செல்) பிரிவுக்கு சுகா தார சீர்கேடு ஏற்படுத்தும் கோழிப்பண்ணையை அப்புறப்ப டுத்த வேண்டி அப்பகுதி பொதுமக்கள் புகார் மனு அளித்த னர்.