districts

img

சாலை வசதி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 8-  சென்னிமலைகவுண்டர் நகர் பகுதியில் சாலை வசதி ஏற்ப டுத்தி தரக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி  ஊராட்சி ஒன்றிய 19ஆவது வார்டு கவுன்சிலர் பி.முத்து சாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு  அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பி.முத்துசாமி அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது, அவிநாசி ஒன்றியம் புதுப்பா ளையம் ஊராட்சிக்குட்பட்ட கா.சா. எண்: 723 உள்ள சென்னி மலைகவுண்டர் நகர் பகுதியில் 83 குடியிருப்புகள் அமைந்துள் ளன. இங்குள்ள மக்கள் வஞ்சிபாளையம் உயர்நிலைப் பள்ளி அருகில் இருந்து செல்லும் சாலையை போக்குவரத் திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் சுமார்  200 மீட்டர் தூரம் ரயில்வே துறைக்கு சொந்தமான பகுதி  ஆகும். அதில் தற்போது ரயில்வே துறை மூலம் புதிய ரயில்  பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால்  சென்னிமலைகவுண்டர் நகர் மக்கள் தங்களின் வீடுகளுக்கு  செல்ல சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மக்கள் செல்வதற்கு  சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பி.முத்துசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.