districts

பூண்டி நகராட்சியில் ஆறு அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

திருப்பூர், செப். 28 - திருமுருகன்பூண்டி நகராட்சி யில் உள்ள ஆறு அரசுப் பள்ளிகளில்  அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றக் கோரி தலைமையாசிரியர் கள் நகராட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருமுருகன்பூண்டி நகராட்சி யில் உள்ள அம்மாபாளையம் நக ராட்சி நடுநிலைப்பள்ளி, தேவராயன் பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, ராக்கியாபாளையம் நக ராட்சி தொடக்கப்பள்ளி, திருமுரு கன்பூண்டி நகராட்சி தொடக்கப் பள்ளி, அணைப்புதூர் நகராட்சி  தொடக்கப்பள்ளி, உமையஞ்செட்டி பாளையம் நகராட்சி தொடக்கப் பள்ளி ஆகிய ஆறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் திரு முருகன்பூண்டி நகராட்சி தலைவர்  நா.குமார், நகராட்சி கமிஷனர் கனி ராஜ் ஆகியோரை சந்தித்து தங்கள் பள்ளிகளுக்குத் தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதா வது: திருமுருகன்பூண்டி நகராட்சி  பகுதியில் உள்ள ஆறு பள்ளிகளிலும் பத்து தூய்மை பணியாளர்கள், ஆறு இரவுக்காவலர்களைப் பணியில் அமர்த்த வேண்டும். மேலும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு இரும்புக்கம்பி (கிரில்) கதவு அமைத்துத் தர வேண் டும். அம்மாபாளையம் பள்ளியில் மாணவிகளுக்குத் தனியாக கழிப்பி டம் உடனடியாக கட்டித்தர வேண் டும். இப்பள்ளியில் பழுதடைந்த சுற்றுச்சுவரை இடித்துப் புதிய சுற்றுச் சுவர் கட்டித்தர வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் அம ரும் தரையில் டைல்ஸ் ஒட்டி தர  வேண்டும். மாணவிகளின் கழிப்ப றைகளில் மாதவிடாய் கால அணை யாடையை எரிக்கும் எரியூட்டி வைத்துத்தர வேண்டும். வகுப்பறைகளில் வண்ணப்ப டங்கள் வரைந்து தருதல், மழைநீர்  சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி தரு வதுடன், புதிய குடிநீர் இணைப்பு கொடுத்து அதனை சேகரிக்க கீழ் நிலை தொட்டி அமைத்து தரவேண் டும்.   அதேபோல் கை கழுவும் வசதியு டன் புதிய சின்டெக்ஸ் அமைத்து சுத்தி கரிப்பு குடிநீர் வசதியும் செய்து தர  வேண்டும். வகுப்பறைகளுக்கு இடையே தடுப்பு சுவர் அமைத்து தரு வதுடன், பள்ளியின் மேற்கூரைகள் உள்பட பழுதான பள்ளி கட்டிடங் களை பழுது பார்த்து தர வேண்டும்.  3ஆம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப் பறைகளில் பெஞ்சு மற்றும் டெஸ்க்கு கள் அமைத்தும், 1 மற்றும் 2 வகுப்பு களுக்கு சிறிய அளவிலான பெஞ்சு  மற்றும் டெஸ்க்குகள் ஏற்பாடு செய்ய  வேண்டும். மேலும் இத்தேவைக ளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து  விரைவில் நிறைவேற்றி தரவேண் டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி தலைவர் நா.குமார், இதுகு றித்து ஆலோசித்து தமிழக கல்வித் துறை அமைச்சரை சந்தித்து விரை வில் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று உறுதி கூறினார்.