நாமக்கல், நவ.10- பொங்கல் கரும்புகளை அரசு முறை யாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அருகே உள்ள சமயசங்கிலி, கலிய னூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்புகள் பயிரிடுவது வழக்கம். ஒவ் வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை யையொட்டி அறுவடை பணிகள் நடை பெறும். இங்கு விளைவிக்கப்படும் கரும்புகளை வாங்க வெளி மாவட்டங் கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து அதிகளவு வியாபாரிகள் வருகை தரு வார்கள். காவிரி ஆற்று நீர் தாராளமாக கிடைப்பதினால், இங்கு விளைவிக்கப் படக்கூடிய கரும்புகள் மிகுந்த சுவை கொண்டதாகவும், சுமார் 8 அடி உயரம் வரை வளரக்கூடியதாக இருப்பதால் இந்த கரும்புகளை வாங்க வியாபாரி கள் ஆர்வம் காட்டுவதுண்டு. தற்பொ ழுது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் கரும் புகள் அறுவடைக்கு தயாராக உள்ளது. தற்போது இப்பகுதி முழுவதும் ஆயிரம் ஏக்கருக்கு குறைவாகவே கரும்புகளை பயிரிட்டுள்ளனர். ஒன்பது மாத பயி ரான கரும்பு சித்திரை மாதத்தில் பயி ரிடும் பொழுது ஏக்கருக்கு ரூ.22 ஆயிரம் செலவு செய்து அறுவடை செய்யும் வரை ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வரை செலவாகிறது வெட்டுக்கூலி செலவு, ஆள் பற்றாக் குறை காரணமாக தற்போது இப்பகுதி யில் ஆயிரம் ஏக்கருக்கும் குறைவா கவே கரும்புகள் பயிரிட்டுள்ளனர். வரு டம் முழுவதும் தண்ணீர் கட்டி, மருந்து அடித்து பாதுகாக்கப்படும் கரும்புக ளுக்கு அரசு 18 ரூபாய் மட்டுமே கொடுப் பதாகவும், அதிலும் மூன்று ரூபாய் கரும்பு பிடுங்கும் கூலி போக 15 ரூபாய் மட்டுமே கிடைப்பதாக விவசாயி கள் வேதனை தெரிவித்தனர். மேலும், தமிழக முதல்வர் 32 ரூபாய் வரை கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு கொடுக்கச் சொல்லியும் அதிகாரிகள் 18 ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர். இதைப் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தாலும், எங்கள் குறைகளை கேட்டுச் செல்லும் ஆட்சியர் நடவ டிக்கை எடுப்பதாக உறுதி கூறினாலும், முதல்வர் நிர்ணயித்த 32 ரூபாய் கூலி தொகையை இதுவரை அரசு கொடுத்த தில்லை. கரும்புகளை கொள்முதல் செய்ய வரும் அதிகாரிகளும் எங்களுடைய கோரிக்கைகளை முறையாக கேட்ப தில்லை. விலையையும் மிகவும் குறை வாக குறைத்து கேட்கின்றனர். இத னால் எங்களுக்கு நட்டம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, இனியாவது அரசு நேரடியாக தலையிட்டு அதிகாரிகளின் தவறுகளை சரி செய்து, எங்களுக்கு சேர வேண்டிய நியாயமான தொகை வழங்க வேண்டும் என கரும்பு விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.