திருப்பூர், அக்.24- நியாய விலைக் கடைகளில் பண்டிகை காலங்களில் முறையாக பொருட்களை விநியோகம் செய்யக் கோரி வாலிபர் சங்க வடக்கு மாநகரக் குழு சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடக்கு மாநகரக் குழு வின் சார்பில் நியாய விலைக் கடைகளில் பண்டிகை காலங்க ளில் முறையாக பொருட்களை விநியோகம் செய்ய வேண் டும். அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்கும் படி விநியோத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பேத்கர் நகர் நியாய விலை கடை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாநகரத் தலைவர் சே.கண்ணன் தலைமையில் வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.அருள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரரா ஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் திரளானோர் பங்கேற்றனர். முடிவில் தமிழ்வாணன் நன்றி கூறி னார்.