உடுமலை, ஜூன் 25- குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்யப்படா ததால், கிராமப்புறங்களில் தொற்று நோய் பரவும் அபாயமுள் ளது. எனவே குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யவும், தேவை யான அளவு குளோரின் கலந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் உடுமலை வருவாய் கோட்டாச்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் உடுக்கம்பாளை யம் பரமசிவம் வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருமூர்த்தி அணையில் இருந்து உடு மலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் கூட்டு குடி நீர் திட்டத்தின் கீழ் பல்வேறு நீரேற்றும் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டிகள் அனைத்தும் திருமூர்த்தி அணைக்கு அருகில் அமைக்கப்பட்டு, குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் பராமரிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மேற்படி திட்டங்க ளின் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் தனியார் பராம ரிப்பின் கீழ் விடப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனங்கள் குடிநீர் தொட்டிகளை பராமரிக்க போதிய ஆட்கள் நியமிக்காத தால் சுத்திகரிப்பு நிலையங்களையும், மிகப்பெரிய அளவி லான உயர்மட்ட தொட்டிகளையும் முறையாக பராமரிக்கா மல் உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்களுக் கும் முறையாக தண்ணீர் வழங்க இயலாத சூழ்நிலை உள்ளது. அதோடு கிராமப்புறங்களில் உள்ள தொட்டிக்களையும் குறிப் பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்து, சரியான அளவு குளோரின் கலந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என் பதையும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் சமீபகாலமாக வயிற்றுப் போக்கினால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. குடிநீரில் உள்ள குறைபாடு களே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இது குறித்து மருத்துவ அலுவலர்களும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டி களை சுத்தம் செய்யாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் விநியோ கத்தை மீண்டும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என குறிப்பிட் டுள்ளது.