காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை
நாமக்கல், ஆக.26- காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண் டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சி பாளையத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயி றன்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலா ளர் சுந்தரம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், காவிரி ஆற்றில் உபரிநீர் வரும்போதெல்லாம் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதனை தடுக்கும் வகையில் காவேரி, பொன்னையாறு, திருமணிமுத்தாறு ஆகியவற்றை இணைத்து சேலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி களை நிரப்பி, பல்லாயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறும் வகை யில் செய்தால் விவசாயம் மேம்படும். இத்திட்டத்தை விரை வாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு, ஆக 26- விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்த னர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி போலீசார் சாமிநாத புரம் பகுதியில் வெள்ளியன்று மாலை ரோந்துப் பணியில் ஈடு பட்டனர். அப்போது, போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற நபரை பிடித்தனர். சோதனையில், அவா் வைத்தி ருந்த பையில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபி டிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், நடத் திய விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த நகினா ஷாகினி (45) என்பதும், நன்செய்ஊத்துக்குளியில் தங்கி அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் பணி செய்து கொண்டு கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
வீட்டுக்குள் புகுந்த கரடிகள்
உதகை, ஆக.26- குன்னூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 2 கரடிகள் சமையல் அறையில் இருந்த சமையல் எண்ணெயை குடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வழக்க மாகி விட்டது. இந்நிலையில், மஞ்சூர் சாலையில் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களில் உதகைக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது, பெங்கால் மட்டம்-கேரிகண்டி சாலை யில் ஒரு கரடி சாலையோரம் நடந்துசென்றது. தொடர்ந்து, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அந்த கரடியை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. இதைபோன்று, குன்னூர் கிளண்டல் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வாசு என்பவரின் வீட்டுக்குள் இரவு நேரத்தில் 2 கரடிகள் புகுந்தன. பின்னர், அவை சமையல் அறையில் இருந்த சமையல் எண்ணெயை குடித்து தீர்த்தன. அப்போது வாசு தற்செயலாக சமையல் அறைக்கு வந்தார். அங்கு 2 கரடிகள் நிற்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீப்பந்தங் களை காட்டி வீட்டுக்குள் உள்ள கரடிகளை விரட்டினார். இருப் பினும் அந்த கரடிகள் சமையல் அறையில் இருந்த எண்ணை கேனையும் எடுத்துச் சென்றன.
கஞ்சா சாக்லேட் பறிமுதல்
கோவை, ஆக.26- விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கஞ்சா சாக் லேட்டை போலீசார் பறிமுதல் செய்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்தனர். கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத் தது. இத்தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளை யம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கீர ணத்தம் பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சயகுமார் சமல் (40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.1 லட் சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பு உள்ள சுமார் 34 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து அந்த நபரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
“வாசிப்பை நேசிப்போம்” நிகழ்ச்சி
நாமக்கல், ஆக. 26- குமாரபாளையம் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார் பில் அதன் தலைவர் பிரகாஷ் தலைமையில் வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் கூட் டம் திங்களன்று நடைபெற்றது. இதில் எழுத்தாளர்கள் நாகு அன்பழகன், கேசவ மூர்த்தி, ராஜகோபாலன், கவிஞர் கும ரேசன், மற்றும் பங்கஜம் ஆசிரியர் தங்கள் எழுதிய புத்தகங்கள் குறித்து அறிமுகம் செய்தனர். இக்கூட்டத்தில் வாசிப்பின் முக்கி யத்துவம், அதை எப்படி மேம்படுத்துவது, எப்படி பொதுமக்களை நூலகத்தின் பயன் களை பெற வைப்பது போன்ற பல விஷ யங்கள் விவாதிக்கப்பட்டன.
அரசு விடுமுறையில் இயங்கிய தனியார் பள்ளி கல்வி அலுவலர் உத்தரவால் விடுமுறை அறிவிப்பு
கோவை, ஆக.26- அரசு விடுமுறை அறிவித்தும் தனியார் பள்ளி இயங்கியதால் மாவட்ட கல்வி அலு வலர் உத்தரவின் பேரில் பிற்பகல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 26 ஆம்தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு நாள் அரசு விடுமுறை அறி விக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புலிய குளம் பகுதியில் இயங்கி வரும் வித்யா நிகேதன் என்ற சிபிஎஸ்இ பாடத்திட்ட தனியார் பள்ளி இயங்கி உள்ளது. அங்கு பயி லும் LKG, UKG குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள் வைக்கப்பட்ட நிலையில், அக்கு ழந்தைகள் வண்ண உடையில் கிருஷ்ணர், ராதை வேடம் பூண்டு வருகை புரிந்து இருந்த னர். ஆனால், இதர வகுப்பினர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றதாக தெரிகிறது. அதனால், அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளி சீருடை பள்ளிக்கு திங்களன்று வருகை புரிந்து உள்ளனர். இது மாவட்ட கல்வி அலுவலர் கவனத் திற்கு சென்ற நிலையில், பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மதியம் 12 மணியுடன் விடுமுறை அளித்தது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிக ளுக்காக பள்ளி வைக்கப்பட்டதாகவும் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் பிற்பகலுக்கு பின்னர் பள்ளிக்கு விடு முறை அளிக்கப்படுவதாகவும் பெற்றோர் களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் வந்து அவர்களது குழந்தைகளை அழைத் துச் சென்றனர்.
பழுதடைந்த நிழற்குடை சீரமைக்க கோரிக்கை
உதகை, ஆக.26- பந்தலூர் அருகே சேரங் கோடு பஜார் பகுதியில் பழு தடைந்த பேருந்து பயணிகள் நிழற் குடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்த லூர் அருகே உள்ள சேரங் கோடு பஜார் பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பேருந்து பயணி கள் நிழற்குடை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், பேருந்துகளுக்காக காத்தி ருக்கும் பயணிகள் நிழற்கு டைக்குள் அமர்வதை தவிர்க் கின்றனர். இருப்பினும் மழை பெய்யும் நேரங்களில் இந்த நிழற்குடைகுள் பொதுமக் கள் நிற்கின்றனர். அபாயக ரமான நிலையில் உள்ள நிழற்குடை இடிந்து விழுந் தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, உயிர்சேதம் நிகழும்முன் இதனை இடித்து அகற்றி, புதிய பேருந்து பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலத்தில் 22 தொழிற்சாலைகள் மூடல்
சேலம், ஆக.26- சேலத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை தயாரித்த 22 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி கோப்பைகள், கைப்பைகள், டம்ளர்கள் உள்ளிட்டவை தயா ரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலத்தில் இதுவரை தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை தயாரித்த 22 தொழிற்சாலைகள் மூடப் பட்டுள்ளன. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட் களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயக்கப்படு கிறதா? என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்கா ணித்து வருகின்றனர். அவ்வாறு கண்டறியப்பட்டால் அந்த ஆலைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குமார் நகரில் நாளை மின் தடை
திருப்பூர், ஆக.26- திருப்பூர், குமார் நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (புதன் கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்க நாதபுரம், ஈ.ஆர்.பி. நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர், டி.எஸ்.ஆர். லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவா ளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்த புரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை படும் என்று திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறி யாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ரத்த தான முகாம்
திருப்பூர், ஆக.26- திருப்பூர் பாரப்பாளையம் மாநகராட்சி பள்ளியில் சிகரம் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதை மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.மேலும், இதில் கேர் வெல் டிரஸ்ட் “மனதோடு பேச” மனநல ஆலோசனை மையம் சார்பில் பல்வேறு ஆலோ சனைகள் வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிர் வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பாலியல் தொல்லை குறித்து பனியன் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
திருப்பூர், ஆக.26- குண்டடத்தில், பாலியல் தொல்லை குறித்து பனியன் நிறுவனத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரி மைத் துறையின் மாவட்ட மகளிர் அதிகார மையம் சார்பில் பெண் குழந்தைகள் மற்றும் பெண் தொழிலா ளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத் தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குண்டடம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை ஏற்பட்டால் எவ்வாறு புகார் தெரிவிக்க வேண் டும் என்பது குறித்து பெண் தொழிலாளர்களுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் சமீரா தலைமையிலான குழு வினர் விளக்கம் அளித்தனர். மேலும் பெண்களின் உதவி எண் 181 மற்றும் குழந்தைகளின் உதவி எண் 1098 என்ற எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம். மனநல ஆலோ சனைகளுக்கு 70105 14431 மற்றும் 90801 26133 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆக.30இல் சமையல் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்
திருப்பூர், ஆக.26- திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகே யன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோ ருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ந் தேதி மாலை 4 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 120இல் நடைபெறும். இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத் தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரி வாயு நுகர்வோர் புகார்கள் மற்றும் குறைபாடுகள் இருந் தால் தங்களது சமையல் எரிவாயு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெற லாம்.
இன்று “மக்களுடன் முதல்வர்” முகாம்
திருப்பூர், ஆக.26- ஊத்துக்குளியில் செவ்வாயன்று (இன்று) “மக்களுடன் முதல்வர்” முகாம்கள் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத் தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை இரண்டாம் கட்ட மாக ஊரகப் பகுதிகளில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, திருப் பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு, 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்க ளில் ஜூலை 16 முதல் செப்டம்பர் 13 வரை 76 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாயன்று (இன்று) ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் ஊத்துக்குளி ஒன்றிய திருமண மண்டபத்தில் அணைப்பாளையம், பல்லவராயன்பாளையம், எஸ்.கத்தாங் கன்னி, இச்சிபாளையம், வடுகபாளையம் ஆகிய ஊராட்சிக ளுக்கும், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் புத்தரச்சல் ஏ.ஜி.அங்காளம்மாள் கோவிந்தசாமி கவுண்டர் திருமண மண் டபத்தில் மாதப்பூர், வே.கள்ளிப்பாளையம் ஆகிய ஊராட்சிக ளுக்கும், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ள கோவில் சுபஸ்ரீ மஹாலில் வேலம்பாளையம், வேலப்பநாயக் கன்வலசு ஆகிய ஊராட்சிகளுக்கும், பல்லடம் ஊராட்சி ஒன்றி யத்தில் வடுகபாளையம்புதூர் சரஸ்வதி மஹாலில் வடுக பாளையம்புதூர், சித்தம்பலம் ஆகிய ஊராட்சிகளுக்கு முகாம் நடைபெறவுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூண்டு விலை கிலோ ரூ.450 ஆக உயர்வு
சேலம், ஆக.26- ஓமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.450 உயர்ந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள் ளிட்ட மாநிலங்களில் இருந்து சேலம் மாவட்டம், ஓமலூர் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுகிறது. வடமாநிலங்க ளில் பூண்டு விளைச்சல் குறைந்ததால் வரத்து குறைந்துள் ளது; அதன் எதிரொலியாக விலை அதிகரித்துள்ளது. 100 டன் வரவேண்டிய சந்தைக்கு, தற்போது 20 டன் அளவு மட்டுமே பூண்டு வருகிறது. இதனால், ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.450 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று, ஒரு கிலோ நீலகிரி மலைப்பூண்டு ரூ.350 – ரூ.500 வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.1.44 லட்சம் கொள்ளை
கோவை, ஆக.26- எந்நேரமும் மனித நடமாட்டம் உள்ள டவுன்ஹால், புறக் காவல் நிலையத்திற்கு முன்பு உள்ள கைவினைப் பொருட்கள் அங்காடியான பூம்புகார் விற்பனை நிலையத்தில் பூட்டை உடைத்து ரூ. 1.44 லட்ச பணத்தை கொள்ளை அடித்து சென்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், டவுன்ஹால் பகுதியில் தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் அங்காடியான பூம்புகார் விற் பனையகம் இயங்கி வருகிறது. வழக்கம் போல் இரவு விற் பனை நிலையத்தை பூட்டி விட்டு சென்ற மேலாளர் ஆனந்தன் மறுநாள் விற்பனை நிலையத்தை திறப்பதற்கு வரும் போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். பிறகு கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பூட்டை ரம்பத் தால் அறுத்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே வருவதும், பின்னர் ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 877 ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றதும் தெரியவந்துள் ளது. இதனையடுத்து மேலாளர் ஆனந்தன் இந்த கொள்ளை சம்பவம் குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் டவுன்ஹால் பகுதி யில் 24 மணி நேரமும் செயல்படும் புறக் காவல் நிலையத் திற்கு முன்பு இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.27 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
சேலம், ஆக.26- ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்பி லான கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்த னர். ஆந்திரா மாநிலத்திலிருந்து சேலத்திற்கு லாரியில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் லட்சுமணன், ஆய் வாளர் பாபு சுரேஷ்குமார், காவலர்கள் ஞாயிறன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரூர் - சேலம் சாலையில் வந்த மினி லாரியில் ரூ.27 லட்சம் மதிப்பிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டுப் போட்டிகள் பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
தருமபுரி, ஆக.26- தருமபுரி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பதிவு செய்ய கால அவகாசம் நீட் டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக ளில், புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக் கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவி லான போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத் தில் நடக்கிறது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாளாக ஆக.25 ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டி ருந்தது. தற்போது அதிக அளவிலான போட்டியாளர்கள் பங் கேற்க ஏதுவாக முன்பதிவு செய்ய வரும் செப்.2 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இது நாள் வரை போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்யாத பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்கள் மற்றும் 15 வயது முதல் 35 வயதுடைய பொதுமக்கள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் “ஆடுக ளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களி லும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக் கப்பட்டுள்ளது.