திருப்பூர், மே 8- திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கோட்ட அளவிலான மாதாந் திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மாவட்ட துணை செயலாளர் எஸ்.வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு, பேசியதாவது, அவிநாசி அத்திக் கடவு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், விடுபட்ட குளம், குட்டைகளை இத்திட்டத்தில் இணைக்க வேண்டும், காற்று, மழையால் பாதிக்கப்பட்ட அவி னாசி பகுதி விவசாயிகளின் வாழை மரங்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், சேவூர் பகுதியில் விவசாய மும்முனை மின் சார விநியோகத்திற்கான நேரம் குறைக்கப் பட்டது. இதனால் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். ஊத்துக்குளி தாலுக்கா அலுவலகத் திற்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும். ஊத்துக்குளி - வடுகபாளையம் கிராமம் வெள்ளைக்கவுண்டன் புதூரில் வெறிநாய் கடியால் இவ்வாரத்தில் 9 ஆடு கள், 3 மாட்டு கன்றுகள் இறந்து விட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வெறி நாய்களை கட்டுப் படுத்த மாவட்ட பிராணிகள் நலச்சங்கத் தின் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண் டும்.
ஊத்துக்குளி இரயில்வே நுழைவு பாலம் பகுதியில் மழை வெள்ள நீர் காரணமாக போக்குவரத்து பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண இரயில்வே, நெடுஞ்சாலை துறை, ஊத்துக்குளி பேரூராட்சி, வடுகபாளையம் ஊராட்சி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டும். இது தொடர்பாக வட்டாட்சியர் முன்னிலை யில் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெ டுக்க வேண்டும். இதில் நெடுஞ்சாலைத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுப்ப தில்லை. அவ்வப்போது ஊத்துக்குளி பேரூ ராட்சி பணியாளர்களை வைத்து பிரச்சனை சீர் செய்யப்பட்டு வருகிறது. ஊத்துக்குளி கிராமம் ரீ.ச. 220-4பி வாரி குளம், 223-3 ஓட்டைக்குளம் ஆகியவற்றை தூர் வார வேண்டும். வாரிக்குளத்தில் கொட் டப்பட்ட பேரூராட்சி குப்பையை அகற்ற வேண்டும். அதற்கு மாற்று இடம் வருவாய் துறை தேர்வு செய்து தர வேண்டும். பல ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கில் வழங் கப்பட்டு வரும் இலவச வீட்டுமனை பட்டாக் களை கிராம் ஆவணங்களில் தாக்கல் செய்ய வேண்டும். பல்லடம் வட்டம், மாணிக்காபுரம் ரீ.ச.எண். 51-ல் சுமார் 9 ஏக்கர் பூமி தான நிலத்தை பிரித்து அப்பகுதி ஏழை, எளிய மக் கள் இலவச வீட்டுமனை வழங்க கோரி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று அளித்த மனுக்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் விபரம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதை குறித்து அங்கு வந்திருந்த துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு உரிய பதிலை கோட்டாட்சியர் பெற்றுக் கொடுத் தார். குறிப்பாக ஒரு வாரத்திற்குள் ஊத்துக் குளி தாலுக்கா அலுவலகத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.