உடுமலை, ஜூலை 28- மலைவாழ் மக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் வழங்கும் மண்ணெண்ணெய் கூடுதல் அளவாக, 10 லிட்டர் வழங்க வேண் டும் என மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியான குழி பட்டி, மாவடாப்பு, குருமலை, மேல்குரு மலை மற்றும் பூச்சிகொட்டாம்பாறை, ஈசல் ்திட்டு ஆகிய குடியிருப்புப் பகுதிகள் மற்றும் திருமூர்த்திமலை அடிவார பகுதிகள் என 18 மக்கள் குடியிருப்புகளில் 3 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக் களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல் லாத நிலையில், மலைவாழ் மக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக சில சலுகை களை பெற முடித்தது. அதன்படி, நியாயவி லைக்கடை பொருட்கள் மலைவாழ் மக்க ளின் குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாக வாக னத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு, சமவெளிப் பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு வழங்கபடுவதுபோல உள்ளது. சமை யல் மற்றும் இரவு நேர விளக்குகளுக்கு என்று அதிகமாக மலைவாழ் மக்களுக்கு மண் ணெண்ணெய் தேவைப்படுகிறது. இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, மலை வாழ் மக்கள் குடியிருப்பில், ஒரு குடும்ப அட் டைக்கு 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ள னர்.