districts

img

விளைநிலங்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை நடத்திய விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

உடுமலை, நவ.4- வன விலங்குகளால் விவசாயிக ளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து  வனத்துறைக்கு தெரிவிக்கும் வகை யில் திங்கட்கிழமை உடுமலை வனச ரக அலுவலகத்தில் வன அலுவலர் மணிகண்டன் தலைமையில் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசுகையில், குடிமங்கலம் ஒன்றியப் பகுதி யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்  நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடப் பட்டு உள்ளது. இம்மாத இறுதியில் அறுவடை செய்ய உள்ள நிலையில்  மக்காச்சோளத்தை காட்டு பன்றி கள் சேதப்படுத்தி வருகின்றன. அதே போல் உடுமலை கல்லாபுரம் பகுதி யில் குரங்குகள் தென்னை மரங் களை சேதப்படுத்தி வருவதை தடுக்க  வேண்டும். மலை அடிவாரப் பகுதி யில் தென்னை மற்றும் விளை நிலங் களில் இருக்கும் விவசாய உபகர ணங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை தடுக்கும் வகையில் மலை அடிவார பகுதியில் சோலார்  மின் வேலி அமைக்க வேண்டும். மேலும், உடுமலை மற்றும் மடத்துக் குளம் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சிறுதானிய பயிர்களை சேதப்படுத் தும் மயில்களை கட்டுப்படுத்த வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.  அனைத்து விவசாயிகளும் வன விலங்குகள் சேதப்படுத்திய பயிர்க ளுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் . விளை நிலத்தை யும், மனிதர்களையும் தாக்கும் காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து விவசாயிகளிடம் பேசிய வனத்துறையினர், விவசாயி களின் கோரிக்கைகளை வனத்து றைக்கு தெரிவிக்கும் வகையில் மாதம் தோறும் 5 ஆம் தேதி உடு மலை வனத்துறை அலுவலகத்தில் குறைதீர்ப்பு  கூட்டம் நடைபெ றும். வனவிலங்குகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகள் தங்களின் குறைகளை உடனடியாக வனத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்  வகையில் வாட்ஸ்அப் குரூப் துவங் கப்படும் என்றார்கள்.