உதகை, மே 22-
கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித பிரிவு நீக்கம் செய்யப் பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண் டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் நீலகிரி மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாவில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களின் உயர் கல்விக்கான தாக கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்று வரு கின்றனர்.
அதேசமயம், வெளியூரில் சென்று உயர்கல்வி பெற முடியாத கூலி தொழிலா ளர்களின் பிள்ளைகள் இக்கல்லூரியில் அதி கம் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பு கல்வியான்டுக்கான முதலாமாண்டு வகுப்பு துவங்குவதற்கு முன்பாக, இக் கல்லூரியிலிருந்து கணித பிரிவு நீக்கப் பட்டுள்ளது. இது ஏழை, எளிய மாணவ, மாணவி களை பெருமளவில் பாதிக்கும். எனவே, இத் தகைய முடிவை திரும்பப்பெற வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாத பட் சத்தில் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக தெரிவித்துள்ளார்.