திருப்பூர், ஏப்.27- சென்னை உயர்நீதிமன்ற உத்தர வுப்படி 218 கைத்தறி நெசவாளர்க ளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க, காலதாமதம் செய்து வரும் பிற்படுத் தப்பட்டோர் நல அலுவலர் மற்றும் காங்கேயம் தனி வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெசவாளர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். சென்னை உயர்நீதிமன்றம் பட்டா வழங்க உத்தரவிட்டபடி மாவட்ட ஆட்சியர் செயல்முறை ஆணை வழங்கிவிட்டார். எனினும் அந்த உத்தரவை அமல்படுத்தாமல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மற்றும் காங்கேயம் தனி வட்டாட்சியர் ஆகியோர் காலதாம தம் செய்கின்றனர். எனவே அவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி வழக்குத் தாக் கல் செய்திருந்த நெசவாளர் காலனி மணி தலைமையில் பாதிக்கப்பட் டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடி வில் மணி, ஆர்.செந்தில்குமார், மாணிக்கம் உள்ளிட்டோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவ லரை சந்தித்தனர். நீதிமன்ற உத்த ரவு அடிப்படையில் விரைவில் நடவ னடிக்கை எடுத்து பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததாக மணி தெரிவித் தார். இதில் சோ.ஆறுமுகம், கலை வாணி செல்வராஜ், ஏ.செந்தில் குமார், மணிக்குமார், கனகராஜ், கோமதி ஆனந்தன், காளீஸ்வரி, உமாராணி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.