தருமபுரி, ஆக.17- மருத்துவமனைகளை பாது காப்பு கோட்டங்களாக அறிவிக்க வேண்டும் என, கொல்கத்தாவில் மருத்துவப்பயிற்சி மாணவி வன் கொலையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்கள் முழக்கமிட்டனர். மேற்குவங்க மாநிலம், கொல் கத்தாவில் மருத்துவப்பயிற்சி மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத் தில் உரிய விசாரணை நடத்தி குற்ற வாளிகளை தண்டிக்க வேண்டும். மத்திய சுகாதார பாதுகாப்பு சட் டத்தை நிறைவேற்ற வேண்டும். நாடு முழுவதும் மருத்துவமனை களை பாதுகாப்பு கோட்டங்களாக அறிவிக்க வேண்டும். பெண் மருத் துவர்கள் இரவு நேரங்களில் பணி செய்யும் பொழுது, போதிய காவலர்களை நியமித்து, அவர்க ளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் பணி புரியும் மருத்துவர்கள் மற்றும் பணி யாளர்கள் அனைவருக்கும் சுகாதா ரமான, பாதுகாப்பான தங்கும் வசதி கள் ஏற்படுத்தித்தர வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் இந்திய பல் மருத்து வர் சங்கம் ஆகியவை சார்பில் சனி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு டாக்டர்கள் சங்க மாநிலச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். இதில் மாவட் டச் செயலாளர் முருகன், இந்திய மருத்துவ சங்க மாவட்டச் செயலா ளர் சண்முகபிரியா, இந்திய பல் மருத்துவர் சங்க மாவட்டத் தலை வர் சுரேஷ், மாவட்டச் செயலாளர் வசந்தராஜ், கெளரவத்தலைவர் நடராஜ் மற்றும் மருத்துவர் இரா. செந்தில் உட்பட திரளான மருத்து வர்கள் கலந்து கொண்டனர். கோவை இதேபோன்று, கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சனியன்று புறநோயாளிகள் பிரிவில் மருத்து வர்கள் பணி புறக்கணிப்பு செய் துள்ளனர். மருத்துவர்களுக்கு பாது காப்பான பணிச் சூழலை ஏற்படுத்த வேண்டும். கொலை செய்யப்பட்ட மருத்துவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழக்க வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக ளுக்கு கடும் தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டுள்ள மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.