districts

img

டிச.19 வாகன பிரச்சாரம்: தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு

திருப்பூர், டிச.12- மக்கள் விரோத ஒன்றிய பாஜக  மோடி அரசின் தொழிலாளர் விரோத  கொள்கைகளை அம்பலப்படுத்தும்  வகையில் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி  முதல் இருசக்கர பிரச்சார இயக்கம்  நடத்துவது என்று அனைத்து தொழிற் சங்க கூட்டத்தில்முடிவு எடுக்கப்பட் டுள்ளது. திருப்பூர் சிஐடியு மாவட்ட அலுவ லகத்தில் செவ்வாயன்று அனைத்து  தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது.  சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி  தலைமையில் நடைபெற்ற இந்த கூட் டத்தில், சிஐடியு சார்பில் ஜி.சம்பத்,  ஒய்.அன்பு, எஐடிசியு சார்பில் என்.சேகர், மோகன், எல்.பி.எப் சார்பில் ரங்கசாமி, மகேஸ்வரன், ஐஎன்டியுசி சிவசாமி, ரஜினி, எச்.எம்.எஸ் சார் பில் முத்துசாமி, அழகர்சாமி, எம்.எல். எப். சார்பில் சம்பத், மனோகரன்,  எஸ்.கே.எம். சார்பில் எஸ்.கே.குழந் தைசாமி ஆகிய சங்கங்களின் நிர்வா கிகள் பங்கேற்றனர். இதில், மக்கள் விரோத ஒன்றிய பாஜக மோடி அர சின் தொழிலாளர் விரோத கொள்கை களை அம்பலப்படுத்தும் வகையில்  மாநிலம் முழுவதுவம் பிரச்சார இய க்கம் நடத்தப்படுகிறது. அதன் ஒரு  பகுதியாக வரும் டிசம்பர் 19 ஆம் தேதி  முதல் திருப்பூர் மாவட்டம் முழுவ தும் இரு சக்கர வாகன பிரச்சாரம்  மேற்கொள்வது என்றும், கலைக் குழுக்களுடன் பிரச்சாரம் மேற் கொள்வது என்று முடிவு எடுக்கப்பட் டுள்ளது.