districts

உணவக உரிமையாளருக்கு கொலை மிரட்டல்! சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

தருமபுரி, செப்.4- சாப்பிட்ட உணவிற்கான பணத்தை கேட்ட உணவக உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார். தருமபுரி - நேதாஜி நெடுஞ்சாலை யில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை செயல்பட்டு வருகிறது. இந்த  மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் காவல் துறை யினர் சுழற்சி முறையில் பணி செய்து  வருகின்றனர். இதனிடையே, அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காவேரி என்பவர், தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள உண வகத்தில் சாப்பிடுவது வழக்கம். அவ் வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கூறி விட்டு சென்று விடுவார் என கூறப்படு கிறது. இதேபோன்று, செவ்வாயன்று சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்கா மல் பின்பு தருவதாக கூறியுள்ளார். அதேபோல் மாலை உணவு சாப்பிட  வந்த காவேரி உணவை சாப்பிட்டுவிட்டு சென்றபோது கடை உரிமையாளர் முத் தமிழ், ஏற்கனவே சாப்பிட்ட உணவிற் கும் சேர்த்து பணம் கேட்டுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த காவேரி, முத்த மிழை தகாத வார்த்தையால் பேசிய தாக கூறப்படுகிறது. மேலும் பணத்தை  தூக்கி வீசிவிட்டு கொலை மிரட்டல்  விடுத்ததாக தெரிகிறது. மேலும், காவேரி தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற கண்கா ணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தர வின்பேரில் தருமபுரி உதவி காவல் கண் காணிப்பாளர் சிவராமன் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து காவே ரியை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.