districts

உதகையில் ஆண் புலிக்குட்டி இறப்பு: சூழலியலாளர்கள் வேதனை

உதகை, செப்.18- உதகை அருகே வனப்பகுதியில்  இரண்டு மாதமே ஆன ஆண் புலிக் குட்டி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப் பகுதிகளை கொண்டது. இங்கு காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான் கள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. நீலகிரி யில் ஒருபுறம் புலிகளில் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தகவல் தெரிவிக் கப்பட்டது. ஆனாலும், மற்றொருபுறம் வனப்பகுதியில் வனவிலங்குகளு டன் மோதல், நோய் உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் முதுமலை வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 புலி கள் இறந்துள்ளன. இந்நிலையில், வனத்துறையினர் சீகூர் வனப்பகுதியில் ரோந்து சென்ற போது, உதகை வடக்கு வனச்சரகம் மற்றும் சீகூர் வனச்சரக எல்லையில் உள்ள சின்னக்குன்னூர் பெந்தட்டி அடுத்த வனப்பகுதியில் புலிக்குட்டி  ஒன்று இறந்து கிடந்தது தெரியவந் தது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற நீலகிரி மாவட்ட வன அதிகாரி கவுதம்  தலை மையிலான வனத்துறையினர் இறந்து கிடந்த புலியின் உடலை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொ டர்ந்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை  மருத்துவர் ராஜேஷ் மற் றும் கால்நடை மருத்துவர் ரேவதி தலைமையிலான குழுவினர் பிரேத  பரிசோதனை செய்தனர். இதன்பின் புலிக்குட்டியின் உடல் அந்த பகுதி யில் எரிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பெந்தட்டி வனப்பகுதி யில் இறந்து கிடந்தது 2 மாத ஆண் புலி குட்டியாகும். பிரேத பரிசோத னையில், பால் இல்லாததால் புலிக் குட்டி இறந்தது தெரியவந்துள்ளது. புலிக்குட்டி இறந்து கிடந்த பகுதியில் தாய் புலியை காணவில்லை.  எனவே வனப்பகுதியில் இதே போல் புலிக்குட்டிகள் வேறு ஏதாவது இறந்துள்ளதா? தாய்புலி எங்கு சென் றது என்பது குறித்து சீகூர் மற்றும் நீலகிரி வடக்கு வனத்துறையினர் வனவர் நவரத்தினம் தலைமையில் வனப்பகுதியில் தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து புலிக்குட்டியின் உடல் உள் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது, என்றனர். நீலகிரி வனப்பகுதியில் தொடர்ந்து புலிகள் உயிரிழப்பதால் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந் துள்ளனர்.