திருச்செங்கோடு, பிப்.01- ஐக்கிய விவசாயிகள் முன் னணி சார்பில் ஒன்றிய மோடி தலை மையிலான அரசை கண்டித்து திங் களன்று திருச்செங்கோடு அண் ணாசிலை அருகில் ஐக்கிய விவசா யிகள் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுதில்லியில் 13 மாதங்களாக நடைபெற்ற விவசாயிகளின் எழுச் சிமிகு போராட்டத்தின் காரண மாக மோடி தலைமையிலான ஒன் றிய பாஜக அரசு 3 வேளாண் சட்டங் களை திரும்பப் பெறுவதாக அறி வித்தது. மேலும், எழுத்து மூலமாக சில கோரிக்கைகளை ஒப்புக் கொண்டது. அதன்படி, குறைந்த பட்ச ஆதார விலை, மின்சார மசோதா வரைவு சட்டம், விவசாயி கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு ரத்து ஆகியவைகளை யும், விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த ஒன்றிய உள் துறை அமைச்சரை பதவி நீக்க வேண்டும். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை யும், தியாகிகளுக்கு நினைவு ஸ்தூபி அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் போன்ற எழுத்துப்பூர் வமாக ஒத்துக்கொண்டபடி எந்த நடவடிக்கையும் ஒன்றிய மோடி அரசு எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இந்தியா முழுவதும் திங்களன்று முதல் துரோக தின கண்டன ஆர்ப் பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக திருச்செங் ்கோட்டில் மாவட்ட அமைப்பாளர் பி.பெருமாள் தலைமையில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஆதி நாராயணன், மாவட்ட பொருளா ளர் மு.து.செல்வராஜ், மாவட்ட உதவித் தலைவர் ஆர்.வேலாயு தம், மாவட்ட உதவிச் செயலாளர் பி.கிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.ஜோதி, பி. பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.துரைசாமி, மாநிலக்குழு உறுப்பினர் சம்பூர் ணம், பயனீட்டாளர் சங்கத் தலை வர் நடேசன், சிஐடியு தலைவர் ராயப்பன், மார்க்சிஸ்ட் கட்சி ஒன் றிய செயலாளர் ஆர்.மனோகரன், ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தனசேகர், பால் உற் பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.முத்துசாமி, கரும்பு விவசாயிகள் சங்கத் தலை வர் செங்கோட்டையன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.