districts

img

சேலத்தில் 2 ஆவது நாளாக சிஐடியு நடைபயணம்

சேலம், மே 26- சிஐடியு நடைபயணம் வெள்ளியன்று 7 ஆவது நாளாகவும், சேலத்தில் இரண்டாவது நாளாக பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டது.  அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு நடைபயணம் 7 முனையில் இருந்து திருச்சியில் சங்கமிக்க உள்ளது. சேலம் ஜங்ஷன் சூரமங்கலம் உழவர் சந்தை முதல் நடைபயணம் துவங்கியது. நடை பயணத்தை வாழ்த்தி பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகளின் சார்பில் எழுச்சிகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது.  முன்னதாக, சிபிஎம் சேலம் மாவட்டக்குழு அலுவலகமான சேலம் சிறை தியாகிகள் நினைவக வளாகத்தில் மாமேதை காரல் மார்க்ஸ் சிலைக்கு நடை பயண குழுவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.