ஈரோடு, பிப்.21 மனித மலத்தை மனிதர்களே அள்ளும் அவலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்த தியாகி லட்சுமண அய்யரின் பிறந்தநாளான இன்று (பிப்.22), சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை முறியடிக்க உறுதியேற்போம் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஈரோடு மாவட்டக்குழு சூளுரைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை யில், கோபிச்செட்டிப்பாளையத் தில் 1917 பிப்ரவரி 22-ல் பெரும் நிலக்கிழாரான சீனிவாச ஐயரின் மகனாகப் பிறந்தவர் ஜி.எஸ்.லட் சுமண அய்யர். இவர், தீண்டா மைக்கு எதிராகவும், பட்டியலின மக்களின் வாழ்கைக்காவும் தனது வாழ்நாளை அர்பணித்தவர். குறிப் பாக, கோபியில் உள்ள பொதுக்கி ணறில் நீர் எடுக்கும் உரிமை தலித் மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன் றத்தை அணுகிய லட்சுமண அய் யர், அந்தத் தடையை நீக்கி அனை வருக்குமான உரிமையை வாங் கிக் கொடுத்தார். மேலும், பவானி வாய்க்கால் வெட்ட மக்களிடமி ருந்து நிலம் எடுக்கப்பட்டதனால் வீடு இழந்தவர்களுக்கு மாற்றிடம் கொடுப்பதற்கும், அவ்விடத்தில் வீடு கட்டுவதற்கும் அரசிடமிருந்து நிதி பெற்றுக்கொடுத்தார். சுதந்தி ரம் அடைந்த பிறகு கோபி நகராட் சியின் தலைவரான அவர், கோபி நகர குடிநீர்த் திட்டத்தைக் கொண் டுவந்ததோடு, தன்னுடைய சொந்த நிலத்தை இலவசமாக வழங்கி னார். மனிதர்கள் மலத்தை மனி தர்களே அள்ளும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கோபி கூட்டுறவு சங்கக் கட்டிடம் மற்றும் கூட்டுறவு வீட்டு அடமான வங்கி யையும் ஏற்படுத்தினார். கொங்கர் பாளையம் கிராமத்தில் 250 ஏக்கர் நிலத்தில் ஏழை மக்களை இணைத்து கூட்டுப் பண்ணை விவ சாயத்துக்கு ஏற்பாடு செய்தார். இத்தகைய தியாக சீலரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அவரது பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 22) ஆண்டு தோறும் கருந்தரங்கம் வாயிலாக நினைவு கூர்ந்து வருகிறது. அவ ருடைய சேவையை நினைவு கூர்வ தன் மூலம் இன்றைய இளைஞர் கள் மத்தியில் சாதி ஒழிப்பு, சனா தன ஒழிப்பு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நம்புகிறது. சமூக நல்லிணக்கம் பேணுவது இன்று குறைந்து, மதத்தால் பிரிவு என்பது அதிகரித்துள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை ஓட்டுக்க ளைப்பெற முடியும் என ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக நம்புகி றது. அதுமட்டுமின்றி ஒற்றைத் தலைமை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கமும் அதிகரித்து வருவது, இந்த நாட்டுக்கே கேடாக அமைந்துள்ளது. சாதாரண மக் களிடையே ஒற்றுமையைச் சிதைத்து, சகோதர உணர்வுகளை சீர்குலைத்து வருகின்றனர். இந்த சூழலில், அரசியல் ஆதாயத்திற் காக மதத்தின் பெயரில் நடக்கும் அணிதிரட்டலை தடுத்து, முறி யடித்து சமூக நல்லிணக்கத்துடன் முற்போக்கான திசை வழியில் செல்ல, தியாகி லட்சுமண அய்ய ரின் பிறந்தநாளில் சூளுரைப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.