உதகை, ஆக.20- பந்தலூர் அருகே பள்ளிக்கு செல்ல வாடகை வாகனங்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலு காவிற்குட்பட்ட அய்யன்கொல்லி, அம் பலவயல், அம்பலமூலா ஆகிய பகுதி களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளி களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கொளப் பள்ளி, ஏலமன்னா, நெல்லியாளம் டேன்டீ, குறிஞ்சி நகர், மழவன் சேரம்பாடி உள் ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப் பகுதிகளுக்கு, தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக கூடலூர் கிளை சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின் றன. ஆனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும் நேரங்களிலும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரங் களிலும் அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படுவது இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் ஆட்டோ, ஜீப் உள் ளிட்ட வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, அந்த வாகனங்களில் தொங்கிக்கொண்டு செல்வதை காண முடிகிறது. இதே நிலை தான், அரசு பேருந்துகளிலும் நிலவு கிறது. இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு பள்ளி நேரங்களில் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை. அப்படியே வந்தாலும் ஒரு பேருந்துதான் வரும். அதில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக் கும்போது, தொங்கிக்கொண்டு சென் றால், தவறி விழும் அபாயம் உள்ளது. இதனால் வாடகை வாகனங்களில் செல் கிறோம். அங்கும் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, தொங்கிக்கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. சிலர், தவறி விழுந்து காயம் அடைந்தும் உள் ளனர். எனவே, நாங்கள் பள்ளிக்கு சென்று வரும் காலை மற்றும் மாலை நேரங்க ளில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.