பொள்ளாச்சி, ஏப்.12- பொள்ளாச்சி சுற்று வட்டாரங்க ளில் பெய்த கனமழை காரணமாக ராட்சத மரம் விழுந்து 50க்கும் மேற் பட்ட இருசக்கர வாகனங்கள் சேத மடைந்தன. கோவை மாவட்டம், பொள் ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திங்களள்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய் தது. இதில், பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத் ்தில் இருந்த ராட்சத மரம் வேரு டன் சாய்தது. இதனால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 50க்கும் மேற் பட்ட இருசக்கர வாகனங்கள் பெரும் சேதமடைந்தன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை யினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சேதடைந்த இரு சக்கர வாகன உரிமையாளர்கள் கூறுகையில், பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான இரு சக்கர வாகன நிறுத்துமிடம் உள் ளது.
இது தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. நாங்கள் எங்களது இருசக்கர வாகனத்தை ஸ்டேன்ட் நிர்வாகத்தை நம்பி தான் நிறுத்தி செல்கிறோம். ஆனால், தற்போது மழை காரணமாக மரம் விழுந்ததில் எங்க ளது வாகனங்கள் பலத்த சேதம டைந்துள்ளது. குத்தகை நிர்வாகத் தினர் இருசக்கர வாகன நிறுத்து மிடத்திற்கு மேற்கூரை அமைத்து தான் பாதுகாப்பான முறையில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், வெட்டவெளியில்தான் பல ஆண்டு களாக நிறுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு நாள் பாதுகாப்பு கட்ட ணமாக ரூ.8 வசூலிக்க வேண்டு மென நகராட்சி நிர்வாகம் ரசீது கொடுக்க வேண்டுமென நிபந் தனை விதித்தது. ஆனால், மாறாக இருசக்கர நிறுத்தம் குத்தகை உரி மையாளர்கள் அதற்கும் கூடுதலாக தான் பணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து கேள்வி கேட்டால் அதிகார தொணியில் மிரட்டுகின் றனர். தற்போது 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பெரும் சேதமடைந் துள்ளது. இதற்கும், தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே, உங்களது வாகனத்தை நீங்களே சரி செய்து கொள்ளுங்கள் என கை விரிக்கின்றனர். இதனை எங்களால் ஏற்க முடியாது. இரு சக்கர வாகன நிறுத்தம் நிர்வா கமே எங்களது வாகனங்களை சரிசெய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.