தருமபுரி, ஆக.31- பாப்பாரப்பட்டி அருகே விளை நிலத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றிகள், பயிரிடப் பட்டிருந்த நிலக்கடலை, மஞ் சள், மக்காச்சோளம் உள் ளிட்ட பயிர்களை சேதப்ப டுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப் பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தில், விளை நிலங்களுக்குள் புகுந்த காட் டுப்பன்றிகள் கூட்டம், பயிரிடப்பட்டிருந்த மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், மிள காய் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்திச் சென்றுள்ளன. இதுகுறித்து காட்டுப்பன்றிக ளால் பாதிக்கப்பட்ட பாரதிபுரத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் என்பவர் கூறுகையில், காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை தோட் டத்தில் ரூ.20 ஆயிரம் மற்றும் மஞ்சள் தோட் டத்தில் ரூ.30 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள் ளது. வனத்துறையினர் எங்களது பயிரிழப் பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்றார். மேலும், அப்பகுதி விவசாயிகள் கூறுகை யில், காட்டுப்பன்றிகளால் ஏற்பட்ட பயிர்க ளுக்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும். இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர் களை சேதப்படுத்தியும், பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. எனவே, வனவிலங்குகளால் பயிர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்து வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.