கி.வீரமணி பேச்சு பள்ளிபாளையம், பிப்.4- செவ்வாய் கிரகத்தில் மனிதன் கால் வைக் கும் காலத்திலும் கூட, கோவில் கருவறைக் குள் தலித் மக்கள் செல்ல முடியாது என்ற நிலை உள்ளது என குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கி.வீரமணி தெரி வித்துள்ளார். “சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை” என்ற தொடர் பயணத்தை திராவிட கழக தலைவர் கி.வீரமணி நாமக் கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சனி யன்று தொடங்கினார். இந்த பயணம் சனி யன்று தொடங்கி கடலூரில் வரும் பிப்.6 ஆம் தேதியன்று நிறைவு பெறவுள்ளது. இதனி டையே குமாரபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிட மாடல் ஆட்சி, வளர்ச்சி சாதனையை குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசுகையில், அனைவருக்கும் அனைத்தும் என்பது தான் சமூகநீதியின் பொருள் என்னும் பெரியார் வழியில் திமுக தலைவரும், முதல் வருமான ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். திராவிட மாடல் குறித்து தெரிந்தும் தெரியா தது போன்று உள்ள தமிழக பாஜகவினருக்கு இதனை உணர்த்த முடியாது. தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சாதி மறுப்பு திருமணத்தில் கூலிப்படையால் நிகழும் ஆணவக்கொலை, குடிநீரில் மனித கழிவுகள் கலக்கும் செயல், போன்றவற்றிற்க்கு பெரியார் என்னும் ஊசி தான் மருத்துவம், என்றார்.
மேலும், இன்றைய காலகட்டத்தில் செவ் வாய் கிரகத்தில் மனிதன் கால் வைத்த நிலை யில் கூட, கோவில் கருவறைக்குள் தலித் மக்கள் செல்ல முடியாது என்ற நிலை உள் ளது. இதனை உடைக்கும் வகையில் அனைத்து சாதினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. புராண காலத்தில் சூதால் மனைவியை இழந் தான் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஆன்லைன் சூதாட்டத்தால் காவல் துறை, பேராசிரியர் உள்ளிட்ட அனைவரும் தற் கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. ஆளுநர் தபால்காரர் வேலை பார்க்காமல், தபாலை பிரித்து பார்க்கும் வேலை மட்டுமே செய்து வருகிறார். சேது சமுத்திர திட்டம் நிறைவேறியி ருந்தால் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தமிழ் நாட்டில் திமுக ஆட்சி காலத்தில் தான் அதிக கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப் படுவதுடன், பழனி முருகனுக்கே முதன் முறையாக தமிழில் அர்ச்சனை செய்து, குட முழுக்கு விழா நடைபெற்றது. பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, இதுவரை தமிழ்நாட் டின் எந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்துள் ளார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண் டும். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்று சொல் லிக்கொண்டு வரும் பாஜகவினர் ஏன் ஒன் றிய அரசு நிதிநிலை அறிக்கையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது குறித்து கேட்கவில்லை என அண்ணாமலைக்கு கி.வீரமணி கேள்வி எழுப் பியுள்ளார்.