districts

img

வளர்ந்து வரும் சைபர் கிரைம்: காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

நாமக்கல், ஜூலை 27- கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சைபர் கிரைம் வளர்ந்து வருவதால், பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள் ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறி யியல் கல்லூரி மற்றும் நேசனல் சைபர் செக்யூரிட்டி ரிசர்ஜ் கவுன்சில் சார்பில், தேசிய சைபர் செக்யூரிட்டி உச்சி மாநாடு, அந்த கல்லூரி அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது. அதன்படி, வெள்ளியன்று நடைபெற்ற துவக்க விழாவிற்கு, கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். நேசனல் சைபர் செக்யூரிட்டி ரிசர்ஜ் கவுன்சில் துணைத்தலைவர் காளி ராஜ், மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் பேசுகையில், போலீசாரின் கடமை என்பது குற்றங்கள் நடப்பதற்கு முன்பே கண்டறிந்து தடுப்பது, நடந்த குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பது, பொதுமக் களை பாதுகாப்பது என்பதுதான்.  இன்று குற்றங்களை செய்கிறோம் என்பதே தெரியா மல் பொதுமக்கள் குற்றங்களை செய்து வருகின்றனர். இந் திய மோட்டார் வாகன சட்டப்படி 95 சதவிகித பொதுமக்கள் முறையாக சாலை விதிகளை பின்பற்றுவதில்லை. சைபர் கிரைம் என்பது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்க தமிழக அரசு மாவட்டந்தோறும் சைபர் கிரைம் காவல் நிலையங்களை தொடங்கியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்கள் மூலமாக செய்யப்படும் மோசடிகளை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்வது கடினமான ஒன்றாகும். எனவே அனை வரும் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும், என் றார்.