ஏடிஎம் அடிக்கடி பழுதடைவதால் வாடிக்கையாளர்கள் அவதி
தருமபுரி டிச-29, தருமபுரி நகராட்சியில் இயங்கிவரும் இந்தியன் வங்கி யின் ஏடிஎம் அடிக்கடி பழுதடைவதால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தருமபுரி நகரம் பென்னாகரம் செல்லும் மெயின்ரோட் டில் இந்தியன் வங்கி கிளையும், மண்டல அலுவலகமும் செயல்பட்டுவருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இந்தியன் வங்கி முன்னோடி வங்கியாக உள்ளது. இந்தியன் வங்கி கிளை முன்பு, பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் ஏடிஎம் இயங்கி வருகிறது. இதோடு சேர்த்து தருமபுரி நகரில் 3 ஏடிஎம் இயங்கு கிறது. இந்தியன் வங்கி ஏடிஎம் பலநேரங்களில் பழுதடைந்து விடுகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பழுதடைந்து விடுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கமுடிவதில்லை. இதுகுறித்து வாடிக்கையா ளர்கள் வங்கிகிளைக்கு புகார் அளித்தும் பழுதுநீக்கும் ஏற்பா டுகள் நடப்பத்தில்லை. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் வேறு வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுப்பதால் ரூ.20 மேல் பிடித்தம் செய்யப்படு கிறது. இப்படி தருமபுரி நகரில் அடிக்கடி ஏடிஎம் பழுதடை வதால் விரக்தியில் இருக்கும் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கை வேறு வங்கிக்கு மாற்றும்சூழ்நிலையை வங்கி நிர் வாகமே தள்ளவிடுகிறது. எனவே வாடிக்கையாளர்களை திருப்தி செய்யும் வகையில், புதிய ஏடிஎம் கள் நிறுவவேண் டும். பழுதடைந்தால் உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்தை வங்கி வாடிக்கையா ளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் பலி
கோவை, டிச.29- பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி படு காயமடைந்து, கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று உயிரி ழந்தார். நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத் தில் 10 நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் சரிதா என்ற பெண் படுகா யம் அடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதைப் பார்த்ததும் சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது. உடன டியாக சரிதாவை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற னர். அங்கு முதலுதவிக்குப்பின் சாரிதா மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. இதனிடையே, மேல் சிகிச்சைக்காக புதனன்று சரிதாவை கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று சரிதா உயிரிழந்தார். சரிதாவின் உயிரிழப்பு உறவினர்கள் மத்தியிலும் ஊர் மக்கள் மத்தி யிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 10 நாட்களுக்கு மேலாகியும் அப்பகு தியில் உலா வரும் சிறுத்தை பிடிபடாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத் துறையினர் விரைந்து பல்வேறு நடவ டிக்கைகளை மேற்கொண்டு சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தென் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம்
உதகை, டிச.29- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு நீலகிரியில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப் பட்டது. தென் தமிழகத்தில் பெய்த மழை காரணமாக திருநெல் வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு பல்வேறு தரப்பினர் நிவாரணப்பொ ருட்களை அனுப்பி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, கோத் தகிரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் கண்ணன் தலைமையில் வியாபாரிகள் வெள்ளியன்று ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை ஊட்டி வருவாய்க் கோட்டாட்சியர் சதீஷியிடம் வழங்கினர்.
ரூ.3.20 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
கோவை, டிச.29- கோவை மாநகராட்சி, 89 ஆவது வார்டுக்குட்பட்ட அன்பு நகரில் மாநகராட் சிக்கு சொந்தமான 11.60 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அதில், 4 கடை களும் கட்டப்பட்டிருந்தன. இவற்றை, தாங்களாக முன் வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப் பப்பட்டது. ஆனால், எவ்வித பதிலும் இல்லை. இதையடுத்து, மேயர் கல் பனா ஆனந்தகுமார், மாநக ராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பே ரில், மாநகராட்சி தெற்கு மண் டல உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி நிர்வாக பொறியா ளர் கனகராஜ், உதவி பொறியாளர் நவநீதகி ருஷ்ணன், வார்டு கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். ஜேசிபி இயந் திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட் டடங்களை இடித்து அகற்றி, அந்த இடத்தை முழுமை யாக மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தின் சந்தை மதிப்பு ரூ.3.20 கோடி ஆகும்.
உடுமலை நகராட்சியை எல்லையை விரிவு படுத்த ஆணையர் கருத்துரு
உடுமலை, டிச.29- உடுமலை நகராட்சியில் எல்லைகளை விரிவு படுத்த வேண்டும் என்ற பல ஆண்டு கோரிகையின் படி நகராட்சி ஆணையர் ஊராட்சி நிர்வாகத்திடம் கருத்துரு கேட்டு உள் ளார். நூற்றாண்டு பெருமை கொண்ட உடுமலைப்பேட்டை நக ராட்சியின் தரம் உயர்த்தும் வகையிலும் மக்களுக்கு நலத்திட் டங்களை எளிதில் கொண்டு செல்லும் வகையில் எல்லை களை விரிவாக்கம் செய்ய வேண்டும். தற்பொழுது 7.41 சதுர கிலோ மிட்டரில் 80 ஆயிரம் மக்கள் வசிக்கும் வகையில் உள்ள நகராட்சியில், 33 வார்டுகள் மட்டுமே உள்ளது. இந்த நகராட்சியின் எல்லைப் பகுதியில் இருக்கும் கிராம ஊராட்சி களான கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, குறுச்சேரி, சின்னவீரம்பட்டி, கணபதிபாளையம், ராகல்பாவி, கண்ணமநாயக்கனூர் மற்றும் பூலங்கிணறு உள்ளிட்ட ஊராட் சிகளை நகராட்சியுடன் இணைத்தால் சுமார் 91.17 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய நகராட்சியாக மாற்றம் அடையும். மேலும், இந்த ஊராட்சிகளில் அதிக வருவாய் மற் றும் ஏற்கனவே குடிநீர் வசதி சாலை போக்குவரத்து திட்டங் களில் தன்னிறைவு என அனைத்து உள்கட்டமைப்பு வசதிக ளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உடுமலை நகராட்சி ஆணையர் ஊராட்சி நிர்வாகத்திடம் எல்லைகளை விரிவு படுத்த வேண்டும் என்று கருத்துரு கேட்டு உள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த ஊராட்சிகளை உடுமலை நகராட்சி யுடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பழுதடைந்து காணப்படும் தொகுப்பு வீடுகள்
உடுமலை, டிச.29- உடுமலை பள்ளாப்பாளையம் பகுதியில் மக்கள் பயன்ப டுத்த முடியாமல் பழுதடைந்து இருக்கும் தொகுப்பு வீடுக ளைப் பராமரித்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறை கொண்ட கான்கிரீட் வீடுகள் கட்டிதரப்பட்டது. தற்பொழுது இந்த வீடு கள் பயன்படுத்த முடியாத வகையில் சிதிலமடைந்து உள்ளன. மேலும், வீடுகளில் மேல் பகுதி இடித்து விழும் நிலையில் உள் ளதால், குடியிருக்க அச்சமாக உள்ளது. அரசு சமத்துவபுரங்க ளில் உள்ள வீடுகளைப் பராமரித்துத் தருவது போல், இடித்து விழும் நிலையில் உள்ள எங்கள் வீடுகளையும் சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தென்னைமரங்களில் அந்துப்பூச்சி தாக்குதல் குறித்து அதிகாரிகள் ஆய்வு
உடுமலை, டிச.29- தென்னைமரங்களில் புதிய வகையான நோய் தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் வெள்ளியன்று ஆய்வு செய்தார்கள். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், உடுமலை சுண்டாக்காம்பாளையம் கிராமத்தில் தென்னை மரங்களை அந்துப்பூச்சி தாக்கியுள்ளது கள ஆய்வில் தெரியவருகிறது. இந்த அந்துப்பூச்சியின் இளம் புழுக்கல் தென்னை இலை யின் கீழ் இருந்து கொண்டு வெளிப்பகுதிகளை உண்ணும். பூச்சி முதிர்ச்சியடையும் போது முழு இலையையும் காணா மல் போகும். இந்த பூச்சியின் தாக்குதல் இருந்தால் தென்னை இலையைத் தொடும் மனிதர்களுக்கும் அரிப்பை ஏற்படும். இதை கட்டுப்படுத்த ஒரு ஏக்கர் தென்னைக்கு மூன்று முதல் நான்கு ஒளிப்பொறிகள் அமைக்க வேண்டும். அவற்றை இரவு 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே எரிய விட வேண்டும். மரத்தின் கீழ் பாத்திரத்தில் தண்ணீர் வைத்தால் பூச்சிகள் பாத் திரத்தில் வீழ்ந்து இறந்து விடும். மேலும் நோய் தாக்கப் பட்ட தென்னை ஓலைகளை வெட்டி எடுத்துவிட வேண்டும். கோரஜன் என்ற பூச்சி மருந்தை 0.5 மில்லி லிட்டர் மற்றும் ஒட்டும் திரவம் 1 மில்லி லிட்டர் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வில் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் கலாமணி உட்பட அலுவலர் கள் பலர் கலந்து கொண்டார்கள். தென்னை மரங்களைத் தாக் கும் அந்துப்பூச்சி குறித்து சந்தேகங்களுக்குத் தோட்டக் கலை உதவி இயக்குநர் 9842950674 , தோட்டக்கலை அலுவ லர் 9865075473 - 9524727052 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளார்கள்.
ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்த பள்ளி மாணவி தற்கொலை
கோவை, டிச.29- பொறியியல் படிப்பில் சேர்வதற்கு, ஜேஇஇ தேர்வு எழுத தயாராகி வந்த கோவையைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், ராமநாதபுரம் அருகே உள்ள புலிய குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாசாணராஜ் (44), டிவி மெக்கா னிக் வேலை செய்து வரும் இவரது மகள் நவீன்யா (16). பீள மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த நவீன்யா, பொறியியல் படிப்பில் சேர்வதற்காக, ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்தார். அதற்காக பயிற்சியும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அண்மை யில் நடந்த மாதாந்திர தேர்வில் அவர் குறைந்த மதிப்பெண் பெற்றதாகவும், இதனால், கடந்த சில நாட்களாக மன உளைச் சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழனன்று காலை அவரது பெற்றோர் வெளியே சென்ற னர். இதன்பின் மதியம் திரும்பி வந்து பார்த்த போது, அறை உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது, நவீன்யா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நவீன் யாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நவீன்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
ஏரியில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
தருமபுரி, டிச.29- செட்டிக்கரை ரெட்டேரியில் நக ராட்சியின் கழிவுநீர் கலப்பதால் விவ சாயம், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்டது செட்டிகரை ஊராட்சி. இங்கு ரெட்டேரி, சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியின் மூலம் செட்டிகரை, காந்திபாளை யம், மதிகோண்பாளையம், குப்பூர், ராஜாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்க ளுக்கு சுமார் 200 ஏக்கர் விவசாய பாசனத்திற்க்கு ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், தருமபுரி நகராட்சி, கடந்த 2010 ஆம் ஆண்டு ரூ.32 கோடி யில், பாதாள சாக்கடை கழிவுநீர் திட் டத்தை நடைமுறைப்படுத்தியது. நக ராட்சியில் இருந்து தினமும் வெளியே றும் 38 இலட்சம் கழிவுநீரை சுத்திக ரிக்க, நகராட்சி அருகே உள்ள காந்தி பாளையம் ரெட்டேரி அருகே, தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், ரூ 3.79 கோடியில், பாதாள சாக்கடை திட்டத்திற்கான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கப்பட்டது. தருமபுரி நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்தி கரிக்க, ரெட்டேரி ஏரியின் அடியில் ராட்சத குழாய் மூலம், சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப் படுகிறது. தற்போது நகராட்சியின் கழிவுநீர் குழாய் ஏரியில் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் பெரும் பகுதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் திற்கு செல்லும் முன், ஏரியிலேயே கலந்து வீடுகிறது. இதனால் ஏரியில் உள்ள சுத்தமான தண்ணீரும், கழிவு நீருடன் சேர்ந்து மாசடைந்துள்ளது. ஏரியில் கழிவுநீர் கலந்து விடுவதால் மாசு ஏற்பட்டு விவசாயத்திற்கு பயன் படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், அதிகம் மழைபெய்து ஏரி யில் இருந்து வெளியேற்றப்படும் தண் ணீர், விவசாய பயிர்களுக்குள் பாய்ந்து பயிர்கள் நோய்வாய்படுகிறது. கோடைக்காலங்களில் ஏரியின் தண்ணீரை கால்நடைகள் பருகுவது வழக்கம், சில ஆண்டுகளாக பருக முடி யவில்லை. ஏரியில் தண்ணீர் இருப் பதால் தற்போது ஏரியை கடந்து காந் திபாளையத்திற்க்கு செல்ல முடிய வில்லை. ஏரியிலிருந்து கொசு, ஈ போன்ற பூச்சிகள் பரவி துர்நாற்றம் வீசுகிறது. இந்த சுத்திகரிப்பு நிலை யத்தில் பெயரளவில், கழிவுநீரை சுத் திகரிக்கப்பட்டு, விவசாயத்திற்கு தண் ணீர் விடுகிறோம் என்று பெயரில், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரையே மீண்டும் ஏரியில் விடும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. அப் பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஏரியில் கழிவுநீர் கலப்பது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து விவசாயத்தையும், அங்குள்ள பொதுமக்களின் சுகாதாரத்தை பாது காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாநகராட்சி அதிகாரி வீட்டில் சோதனை
சேலம், டிச.29- சேலம் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர், கடந்த 4 ஆண்டில் ரூ.40 லட்சம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் உதவி வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து உதவி வருவாய் அலுவலர் தமிழ்மணி, அவரது மனைவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் அவர் வருமானத்திற்கு அதிகமாக 480 சதவிகிதம் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்தது. 4 ஆண்டில் மட்டும் ரூ.40 லட்சத்திற்கு சொத்து சேர்த்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கே.ஆர்.தோப்பூரில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அவரது 2 அடுக்குமாடி வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், வங்கி லாக்கர் சாவி ஒன்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து சென்றனர்.