கடந்த சில வாரகாலமாகவே தொட ரும் கடும் பனிபொழிவு காரண மாக கறிவேப்பிலை கருகி வீணா வதால் விவசாயிகள் கவலைய டைந்துள்ளனர். கோவை மாவட்டத்தின், மேட்டுப்பா ளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழைக்கு அடுத்த படியாக கறிவேப்பிலையே அதிகள வில் பயிரடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் கறிவேப்பிலை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவ்வாண்டு வழக்கமாக பெய்ய வேண்டிய பருவ மழையின் அளவு போதுமானதாக இருந்தாலும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கொட்டி தீர்க்கும் கடும் பனியால் கறிவேப்பிலை விவசாயம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மலையடிவாரத்தில் அமைந் துள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் மாலை ஐந்து மணி முதல் காலை எட்டு மணிவரை கடும் பனிப்பொழிவு நீடிப்ப தால் வளர்ச்சி பாதித்திருந்த கறிவேப்பி லைகள் தற்போது பூச்சி தாக்குத களாலும் பாதிப்படைந்து வருகின்றன. கடும் பனியால் கருகி வரும் கறிவேப்பி லைகளில் நோய் தாக்குதல்களும் அதி கரித்து இதன் இலைகள் சுருங்கி புள்ளிக ளோடு காணப்படுகின்றன.
இதனால் இப்பகுதிகளில் கறிவேப்பிலை உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்து இதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கறிவேப்பிலை கிலோவுக்கு ரூ. 40 வரை விலை போன நிலையில், தற்போது வி ளைச்சல் பாதித்து தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளதன் காரணமாக கிலோவுக்கு ரூ.60 வரை விலை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் எவ்வித பலனும் இல்லை என வருத்தம் தெரி விக்கும் கறிவேப்பிலை விவசாயிகள், பனி பாதிப்பால் முன்னர் கிடைத்த விளைச்சலில் இருபது சதவிகிதம் கூட கிடைப்பதில்லை என்றும் மகசூல் பாதித்து விளைச்சல் குறைந்து விட்ட தால் கூடுதல் விலை கிடைத்தும் பல னில்லை என்கின்றனர். நூறு கிலோ கிடைக்கவேண்டிய இடத்தில் பதி னைந்து கிலோ வரை மட்டுமே கிடைப் பதால் தாங்கள் பெரும் இழப்பில் சிக்கி தவிப்பதாக வேதனை தெரிவிக்கின் றனர். - இரா.சரவணபாபு