கோவை, மார்ச் 10- கோவை அன்னூர் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து சாகுபடியில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள கஞ்சா செடி களை பறிமுதல் செய்தனர். கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செரயாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக போலீசருக்கு கிடைத்த தகவலின் பேரில் செரையாம்பாளையம் பகுதியில் கண் காணிப்பு மற்றும் ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத் தினர். அப்போது, ஸ்ரீபேக்கரி எதிரில் உள்ள வீட்டிற்கு அருகே காலி இடத்தில் சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்த்ததாக வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் அவர் பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த பிண்டு கேவட் (25) என்பதும், செரயாம்பாளை யத்தில் வீடு எடுத்து தங்கி தனியார் நிறுவனங்களுக்கு ஆட் களை வேலைக்கு அனுப்பும் வேலை செய்து வந்ததும், வீட்டில் சட்ட விரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீ சார் அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ எடையுள்ள கஞ்சா செடி யினை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.