உதகை, செப்.1- கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதி கரித்துள்ளது. இவைகள் கடந்த சில தினங்களாக, கூடலூர் பேரூராட்சி அலுவலகம், தொடக்கப்பள்ளி வகுப்பறை மற்றும் சமையல் அறைகளை காட்டுயானைகள் சேதப் படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம டைந்துள்ளனர். கூடலூர் தாலுகா, ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அப் பகுதியில் மனித விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. பேரூராட்சி அலுவலகம் மற்றும் அதன் அருகே உள்ள அரசு தொடக்க பள்ளி, நூலகம், கிராம அஞ்சலகத்தை 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் சூறையாடின. இதில், பேரூராட்சி அலு வலக பொருட்கள், பள்ளி வகுப்பறைகள், நூலகத்தில் இருந்த கணினி மற்றும் தளவாடப் பொருட்கள், அஞ்சல கத்தில் இருந்த பதிவேடுகள் சேதமானது.
இந்நிலையில், காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பேரூராட்சி அலுவ லகத்தை சூறையாடின. தொடர்ந்து பள்ளியில் உள்ள சத்துணவு அறையை சேதப்படுத்தின. பின்னர் அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றன. மேலும், அங்குள்ள நூலகத்தை சேதப்படுத்தின. இதேபோல் அனைத்து கட்டிடங்களிலும் இருந்த கதவு களை காட்டு யானைகள் வளைத்து பயன்படுத்த முடி யாத வகையில் சேதப்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவ லறிந்த ஓவேலி பேரூராட்சி மற்றும் வருவாய், வனத் துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை சாப்பிட்டு பழகிவிட்டதால் காட்டு யானைகள் தொடர்ந்து அப்பகுதி வந்து 3 ஆவது முறை யாக பொருட்கள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தியதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பேரூராட்சி அலுவலக பகுதியில் இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுப் பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத் தனர். இனிவரும் நாட்களில் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித் தனர்.