districts

img

சாரம் சரிந்து பலியானவரை சாலையில் போட்டு சென்ற கொடுமை

கோவை, மே 12- சுவற்றில் வர்ணம் பூசு கையில் சாரம் சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தவரை சாலையில் கிடத்திச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.  கோவை, வடவள்ளியில் வேம்பு அவென்யூ பகுதியில் தனியார் அபார்ட்மென்ட் உள் ளது.  இங்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டி ருந்தார். அப்போது சாரம் சரிந்து விழுந்ததில் அவர் கீழே  விழுந்து உயிரிழந்துள்ளார். இவரை பணிக்கு அழைத்து  வந்த வர்கள் யார் என்று தெரியாத நிலையில், சிலர் உயிரிழந்த ஊழி யரை தூக்கி அபார்ட்மென்ட்க்கு  வெளியே உள்ள சாலையில் சேர் போட்டு அமர வைத்து, அவர் மீது போர்வையை போர்த்தி யுள்ளனர். சுமார் ஒரு மணி  நேரத்திற்கு மேலாகியும் உயிரி ழந்தவர் உடல் என்ன ஆனது?  என்பது குறித்தும், காவல் துறைக்கு தகவல் அளிக்கவும் யாரும் முன்வரவில்லை.  இந்நிலையில், அவ்வழியாக சென்ற ஒருவர் இதனை  புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள் ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலானதையடுத்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்து வமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.  இவர் யாருடைய வீட்டிற்கு வர்ணம் பூசுவதற்காக வந்தார், ஏன் இறந்த பிறகு தகவல் கூட அளிக்காமல் மறைத்தனர் என் பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இறந்தவரை சாலையில் போட்டுவிட்டு கண்டு கொள்ளா மல் சென்ற கொடூர சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது.